மாநில நிகழ்வுகள்
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இயக்கத்தின் தூதராக சோனு சூட் நியமிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டமானது ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் குழாய் வாயிலாக குடிநீர் வழங்குவதற்கான இலக்கை பஞ்சாப் நிர்ணயித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்கா மாவட்டத்தில் அம்போலி அருகே முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் மகன் தேஜாஸ் தாக்கரே மற்றும் அவரது குழுவினர் சிஸ்டுரா ஹிரண்யகேசி புதிய நன்னீர் மீன் வகைகளை கண்டுபிடித்தனர். இதனையொட்டி அம்போலி புதிய பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சல் தினம் ஏப்ரல் 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
86வது உத்கல் திவாஸ் அல்லது ஒடிசா தினம் ஏப்ரல் 1 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. ஏப்ரல் 1,1936 அன்று ஒடிஸா மாநிலம் உருவாக்கப்பட்டது.
ஒடிசா மாநிலத்தில் கரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக 14 நாட்கள் "Mask Abhiyan" பிரச்சாரத்தை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஒடிசா மாநில அரசானது மகேந்திரகிரி பகுதியை அம்மாநிலத்தின் இரண்டாவது உயிர்கோள காப்பகமாக அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
ஓடிசாவின் முதலாவது உயிர்கோள காப்பகம் : சிம்லிபால்.
சுதந்திரப் போராட்ட் வீரரான சாதிக் அஷ்பக் உல்லாக் கானின் பெயர் சூட்டப்பட்டுள்ள விலங்கியல் பூங்காவை உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் திறந்து வைத்தார்.
இது அம்மாநிலத்தின் மூன்றாவது விலங்கியல் பூங்காவாகும்.
டின்கா டின்கா அறக்கட்டளை ஹரியானா மாநில அரசுடன் இணைந்து சிறைச்சாலை வானொலி திட்டத்தை தொடங்கி உள்ளது.
சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் அதிகளவில் பணத்தை சேமித்து வைத்துள்ள மாநிலங்களின் பட்டியலில் மேற்கு வங்கம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா என்னும் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் சாலை அமைப்பதற்கான திட்டத்தை 2020-21 ஆம் நிதி ஆண்டில் சிறப்பாக நிறைவேற்றிய மாநிலங்களின் பட்டியலில் சத்தீஸ்கர் முதலிடம் பிடித்துள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கிய நாட்டின் முதல் மாநிலம் என்ற பெருமையை ராஜஸ்தான் பெற்றுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ 5 இலட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு அளிக்கப்படுகிறது.
நாட்டிலேயே முதல் முறையாக சைக்கிள் ஓட்டுவதற்கான வரைவு கொள்கையினை தயாரித்துள்ள மாநிலம் என்ற பெருமையினை சண்டிகர் பெற்றுள்ளது.
ஆந்திர மாநில அரசானது Microsoft நிறுவனத்துடன் இணைந்து 1.6 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
காணொளியை காண கீழேயுள்ள Play பொத்தானை அழுத்தவும்.
மாதிரி வினாக்களை எழுதிப் பார்க்க கீழேயுள்ள Start the Quiz பொத்தானை அழுத்தவும்.