விளையாட்டு நிகழ்வுகள்
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
மியாமி ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
35 ஆண்டுகால மியாமி ஓபன் டென்னிஸ் வரலாற்றில் அடுத்தடுத்து பட்டத்தை வென்ற 6வது வீராங்கனை என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.
மேலும் இந்த வெற்றியின் மூலம் உலகின் முதல் நிலை வீராங்கனை இடத்தையும் தக்க வைத்துள்ளார்..
மியாமி ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் போலந்தின் ஹியூபர்ட் ஹர்காக்ஸ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
மியாமி ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் குரேஷியாவின் மேட்பாவிச் மற்றும் நிகோலாமேக்டிச் இணை சாம்பியன் பட்டத்தை வென்றது.
மியாமி ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் Shuho Aoyama மற்றும் Ena Shibahara இணை சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஜெர்மனியில் நடைபெற்ற 43வது “Porsche Tennis Grand Prix” போட்டியில் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி அமெரிக்காவின் ஜெனிபர் ப்ராடி இணை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
ஸ்பெயினில் நடைபெற்ற 68வது “பார்சிலோனா ஓபன் டென்னிஸ்” போட்டியில் ஆடவர் பிரிவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால் (12வது முறையாக) வெற்றி பெற்றுள்ளார்.
துருக்கியில் நடைபெற்ற இஸ்தான்புல் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ருமேனியாவின் சொரானா சிரஸ்டி கோப்பை வென்றார்.
இது அவரது டென்னிஸ் வரலாற்றில் 2வது சாம்பியன் பட்டமாகும்.
செர்பிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இத்தாலியின் மேட்டியோ பெரேட்டினி சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவின் சார்ல்ஸ்டன் நகரில் நடைபெற்ற MUSC Health Women’s Open 2021 டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் அஸ்த்ரா சர்மா சாம்பியன் பட்டம் வென்றார்.
மான்டிகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த Stefanos Tsitsipas சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியானது வங்கதேச தலைநகர் டாக்காவில் வரும் அக்டோபர் 01 முதல் 09 வரை நடைபெறும் என ஆசிய ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.
கஜகஸ்தானின் அல்மேட்டி நகரில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றவர்கள் குறித்த தகவல்கள் பின்வருமாறு:
வினேஷ் போகத் (53 கிலோ)
அன்ஷு மாலிக் (57 கிலோ)
சரிதா (59 கிலோ தொடர்ந்து இரண்டாவது முறை)
திவ்யா காக்ரன் (72 கிலோ)
ரவிகுமார் தாஹிபா (57 கிலோ தொடர்ந்து இரண்டாவது முறை).
கஜகஸ்தானின் அல்மேட்டி நகரில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் சாக்ஷி மாலிக் (67 கிலோ) வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
65 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இந்தியாவைச் சேர்ந்த பஜ்ரங் புனியா முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக வெள்ளிப்பதக்கத்தோடு போட்டியில் இருந்து வெளியேறினார்.
உஸ்பெகிஸ்தான் ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் இரண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றவர்கள் குறித்த தகவல்கள் பின்வருமாறு:
ஜில்லி தலாபெஹரா (45 கிலோ)
மீராபாய் சானு (49 கிலோ)
ஆண்கள் உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டி 2023ம் ஆண்டு உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ளது.
போலந்தில் நடைபெற்ற இளையோர் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய மகளிர் 4 பேர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
ஜீத்திகா (48 கிலோ)
பேபிரோஜிசனா சானு (51 கிலோ)
பூனம் (57 கிலோ)
வின்கா (60 கிலோ)
இந்தியாவின் 68வது செஸ் கிராண்ட் மாஸ்டராக தமிழகத்தைச் சேர்ந்த அர்ஜுன் கல்யாண் உருவாகியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் சேலஞ்சர் போட்டியில் அமெரிக்காவின் டோட்லி ஹாரிட்டி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
மகளிர் பிரிவில் எகிப்தின் ஹனா மோட்டாஸ் (Hana Moataz) சாம்பியன் பட்டம் வென்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் சபாரத்தினம் காலமானார்.
இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளரான சந்திரா நாயுடு சமீபத்தில் காலமானார்.
மேலும் இவர் இந்திய டெஸ்ட் அணியின் முதல் தலைவரான C.K.நாயுடு அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மகளிர் கால்பந்து அணியின் கேப்டனாக தமிழகத்தைச் சேர்ந்த இந்துமதி கதிரேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ICCயின் மார்ச் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதானது இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
IPL போட்டிகளில் 350 சிக்சர்கள் விளாசிய முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் வீரர் க்றிஸ் கெயில் படைத்துள்ளார்.
IPL போட்டிகளில் 6000 ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி படைத்துள்ளார்.
IPL போட்டிகளில் 5000 ரன்களை கடந்த இரண்டாவது வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஏபிடி வில்லியர்ஸ் படைத்துள்ளார்.
இந்த சாதனையைப் படைத்த முதல் வெளிநாட்டு வீரர் : டேவிட் வார்னர்.
IPL போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் (CSK) வீரரான ரவீந்தர ஜடேஜா பெங்களூருக்கு எதிரானப் போட்டியில் ஒரே ஓவரில் 37 ரன்கள் எடுத்து க்றிஸ் கெயிலின் (RCB) சாதனையை சமன் செய்தார்.
கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் இங்கிலாந்தை சேர்ந்த விஸ்டன் இதழ் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி 1971-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் சிறந்த ஒரு நாள் போட்டி வீரர்களை தேர்வு செய்து கவுரவித்துள்ளது.
1970-களில் விவியன் ரிச்சர்ட்சும் (வெஸ்ட்இண்டீஸ்),
1980-களில் கபில்தேவும் (இந்தியா),
1990-களில் சச்சின் டெண்டுல்கரும் (இந்தியா),
2000-களில் முரளிதரனும் (இலங்கை),
2010-களில் விராட் கோலியும் (இந்தியா).
2021ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்குக் கிடைத்துள்ளது.
2020ஆம் ஆண்டிலும் இந்த விருதை இவர்தான் வென்றிருந்தார்.
இதன் மூலம், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக விஸ்டன் விருதை வெல்லும் முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஸ்டோக்ஸ் தனதாக்கியுள்ளார்.
2021ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக ஆஸ்திரேலிய அணியின் பெத் மூனி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
சிறந்த டி-20 வீரருக்கான விருது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கெய்ரான் பொல்லார்டுக்குக் கிடைத்துள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் போர்ட் சார்பில் வழங்கப்படும் சிறந்த வீரருக்கான Sir Richard Hadlee Medal ஆனது நான்காவது முறையாக நியூசிலாந்து அணி கேப்டனான கேன் வில்லியம்சன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது..
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக வடகொரியா நாடு அறிவித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பாய்மரப்படகுப் போட்டியில் தனி நபர் பிரிவில் விஷ்ணுசரவணன் மற்றும் நேத்ரா குமணன் ஆகியோரும், இணைப் பிரிவில் கணபதிசெங்கப்பா – வருண் தக்கார் இணையும் தகுதி பெற்றுள்ளனர்,
இந்தியாவிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பாய்மரப் படகு பிரிவில் மொத்தம் 4 பேர் தகுதிப் பெற்றுள்ளனர். தகுதிப் பெற்ற நால்வரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பாகும்.
ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவிலிருந்து தகுதி பெறும் முதல் பாய்மரப்படகு வீராங்கனை என்ற சாதனையை சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணன் படைத்துள்ளார்.
காணொளியை காண கீழேயுள்ள Play பொத்தானை அழுத்தவும்.
மாதிரி வினாக்களை எழுதிப் பார்க்க கீழேயுள்ள Start the Quiz பொத்தானை அழுத்தவும்.