இந்திய நிகழ்வுகள்
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் முதலாவது, முழுவதுமாக மின்மயமாக்கப்பட்டுள்ள ரயில்வே மண்டலம் எனும் பெருமையை மேற்கு மத்திய ரயில்வே மண்டலம் பெற்றுள்ளது.
மேற்கு மத்திய ரயில்வே தலைமையிடம் : ஜபல்பூர் (ம.பி).
மின்மயமாக்கப்பட்ட தூரம் : 3012 Km.
இந்தியாவின் முதல் முப்பரிமாணத்தில் அச்சிடப்பட்ட வீட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை IITயில் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் முதல் முறையாக சூரிய ஒளியில் இயங்கும் சோலார் கோழி குஞ்சு போரிப்பான் இயந்திரத்தை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் தயாரித்துள்ளது
PM KUSUM திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதல் பண்ணை அடிப்படையிலான மின் திட்டத்தினை ஆணையிடும் மாநிலமாக ராஜஸ்தான் உருவாகியுள்ளது.
PM KUSUM திட்டம் தொடங்கிய ஆண்டு : 2019
PM KUSUM திட்டம் தொடங்கிய அமைச்சகம் : மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
நோக்கம் : விவசாயத்தில் சூரிய சக்தியை பெருமளவு பயன்படுத்துவதை ஊக்குவிப்பது.
இலக்கு : 2022ம் ஆண்டிற்குள் 25,750MW சூரிய ஆற்றல் திறனை விவசாயத்திற்கு பயன்படுத்துவது.
PM - KUSUM : Pradhan Mantri Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan
மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கிய நாட்டின் முதல் மாநிலம் என்ற பெருமையை ராஜஸ்தான் பெற்றுள்ளது.
திட்டத்தின் பெயர் : Mukhyamantri Chiranjeevi Swasthya Bima Yojana
இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ 5 இலட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் பசுமைப் பத்திரங்களை (Green Bonds) வெளியிட்ட முதல் நகராட்சியாக காசியாபாத் (உத்திரப்பிரதேசம்) திகழ்கிறது.
இந்தியாவின் முதல் மிதக்கும் சேமிப்பு மற்றும் மறுசீரமைப்பு பிரிவு (FSRU) கப்பல் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள H-எனர்ஜியின் ஜெய்கர் முனையத்திற்கு (H-Energy's Jaigarh Terminal) வந்துள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக சைக்கிள் ஓட்டுவதற்கான வரைவு கொள்கையினை தயாரித்துள்ள மாநிலம் என்ற பெருமையினை சண்டிகர் பெற்றுள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக மூங்கிலில் வசிக்கும் ஒட்டும் தன்மையுள்ள வட்டுகளை கொண்ட வௌவால் இனம் மேகாலயாவில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போதுள்ள வௌவால் இனங்களின் எண்ணிக்கை 130.
இதில் மேகாலயாவில் மட்டும் 66 வௌவால் இனங்கள் உள்ளன.
இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளரான சந்திரா நாயுடு சமீபத்தில் காலமானார்.
மேலும் இவர் இந்திய டெஸ்ட் அணியின் முதல் தலைவரான C.K.நாயுடு அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தேசிய அளவில் சிறு சேமிப்பு திட்டத்தில் மேற்கு வங்க மாநிலம் முதலிடம் வகிக்கிறது.
மொத்த சிறு சேமிப்பில் மேற்கு வங்க மாநிலத்தின் பங்களிப்பு மட்டும் 15% ஆகும்.
இந்தியாவில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா என்னும் திட்டத்தின் கீழ் சாலை இணைப்புகளற்ற அனைத்து கிராமங்களிலும் அனைத்து பருவங்களிலும் தாங்கக்கூடிய சாலை அமைப்பதற்கான திட்டத்தை 2020-21 ஆம் நிதி ஆண்டில் சிறப்பாக நிறைவேற்றிய மாநிலங்களின் பட்டியலில் சத்தீஸ்கர் முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவிலேயே முதல் மாவட்டமாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் உதம்பூர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) என்பது தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை வழங்கிய நிறுவனத்தின் பெயரை அறிவித்த முதல் கட்சி.
உழவர்களின் வருவாயை அதிகரிப்பதற்கான மாதிரித் திட்டத்தை 6 மாநிலங்களில் உள்ள 100 கிராமங்களில் ஓராண்டுக்கு செயல்படுத்துவதற்காக Microsoft நிறுவனத்துடன் மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
Flipkart நிறுவனமானது ஆன்லைன் வர்த்தகத்திற்கான ஆசியாவின் மிகப்பெரிய Fulfilling Centre – யை ஹரியானா மாநிலம் குருகிராமின் மானெசர் என்னுமிடத்தில் அமைக்கவுள்ளது. இதற்காக ஹரியானா அரசு 140 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.
Leaders Summit on Climate உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டின் கருப்பொருள் : Our Collective Sprint to 2030
இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்ட தேசிய தலைவர்கள் எண்ணிக்கை : 40
மாநாட்டின்போது மோடி அவர்கள் மேற்கோள் காட்டிய பொன்மொழி : “எழுமின், விழுமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது செல்மின்”.
6வது Raisina Dialogue முதல் முறையாக காணொலி வாயிலாக நடைபெற்றது.
ரைசினா உரையாடல் என்பது புவிசார் அரசியல் மற்றும் புவி பொருளாதாரம் குறித்த இந்தியாவின் முதன்மை மாநாடு ஆகும்.
இது 2016 முதல் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
Theme : “#ViralWorld: Outbreaks, Outliers and Out of Control”.
“A-WEB” எனும் தேர்தல் ஆராய்ச்சி இதழின் முதல் பதிப்பை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார்.
SARTHAQ என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங் அறிவித்துள்ளார்.
SARTHAQ : ‘Students’ and Teachers’ Holistic Advancement through Quality Education
SUPACE என்ற பெயரில் உச்ச நீதிமன்றத்தின் செயற்கை நுண்ணறிவு உதவியுடனான இணையதள சேவையை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தொடங்கி வைத்துள்ளார்.
பழங்குடியினச் சமுதாயத்தினரின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து முறையை மேம்படுத்துவதற்காக அன்னமயா என்ற பழங்குடியினர் கூட்டமைப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்.
Poshan Gyan என்ற பெயரில் ஊட்டச்சத்துத் துறையில் பணிப்புரிவோருக்கான அனைத்து தகவல்களுமடங்கிய ஒருங்கிணைந்த இணையதள சேவையை Niti Aayog மற்றும் Bill and Melinda Gates Foundation இணைந்து தொடங்கியுள்ளன.
ஆகார் கிராந்தி என்ற பெயரில் ஊட்டச்சத்து உணவின் தேவைப் பற்றிய செய்தியை மக்களுக்கு பரப்ப தேசிய அளவிலான திட்டத்தை விரைவில் அறிவிக்க உள்ளது.
கடல் உணவு பொருட்கள் விற்பனைக்கான eSaNTA என்ற வலைதளப் பயன்பாட்டை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் தேன் உற்பத்தித் திட்டத்தை மேம்படுத்த, தேசிய தேனீக்கள் வாரியமானது மது கிராந்தி தளத்தை முன்னெடுத்துள்ளது. இதனை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்.
Honey Corners என்ற பெயரில் தேன் விற்பனைக்கான பிரத்யேக மையங்களை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த மையங்கள் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பின் மூலம் நிர்வகிக்கப்படும்.
தேன் மற்றும் தேனீ சார்ந்த பிற பொருள்களை இணையதளம் மூலமாக பெறுவதற்காக தேசிய தேனீ வாரியத்துடன் இந்தியன் வங்கி ஒப்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ‘Citi Bank’ இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளில் நுகர்வோர் வங்கிச் சேவையிலிருந்து வெளியேறயுள்ளதாக அறிவித்துள்ளது.
நோயற்ற சமுதாயத்தை ஏற்படுத்தும் வகையில் “Immune India, Deposit India” என்ற புதிய திட்டத்தை Central Bank of India அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் படி, தடுப்பூசி போட்டுக்கொண்ட வாடிக்கையாளர்கள் 1,111 நாட்களுக்கு குறிப்பிட்ட தொகையை வைப்புத்தொகையாக செலுத்தினால் வட்டி வீதம் 0.25% கூடுதலாக வழங்கப்படும்.
சமஸ்கிருத கற்றல் பயன்பாடான லிட்டில் குரு என்ற செயலி வங்கதேசத்தில் உள்ள இந்திரா காந்தி கலாச்சார மையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ICCR : Indian Council for Cultural Relations.
இந்தியாவில் மனநலத்தை மேம்படுத்துவதற்கான Manas என்ற செயலியை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் K.விஜயராகவன் வெளியிட்டுள்ளார்.
MANAS : Mental Health and Normalcy Augmentation System.
இந்தியாவில் நோய் கண்காணிப்புக்காக ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளத்தை (IHIP) மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் இந்தியா, Advance Digital Disease Surveillance System அறிமுகம் செய்துள்ள உலகின் முதல் நாடாக உருவாகியுள்ளது.
அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ‘ஆயுஷ்-64’ மருந்து நல்ல பயனுள்ளதாக இருக்கும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்க, உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 'ஆர்சனிக் ஆல்பம் 30' என்ற ஹோமியோபதி மருந்தை எடுத்துக்கொள்ள ஆயுஷ் அமைச்சகம் கடந்த ஆண்டு பரிந்துரைத்தது..
அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ‘ஆயுஷ்-64’ மருந்து நல்ல பயனுள்ளதாக இருக்கும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ளது.
மிதமான கரோனா தொற்று ஏற்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சைடஸ் காடில்லா மருந்து நிறுவனத்தின் விராக்பின் மருந்தினை கட்டுப்பாடுகளுடன் கூடிய அவசரக் கால பயன்பாட்டிற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குனரகம் (DGCI) அனுமதியளித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு ஆயுர்வேத மருந்தான Clevera Tablets & Syrub மருந்தை Apex Laboratories Pvt Ltd நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவம் ஆராய்ச்சி கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் டிகா உத்சவ் என்ற பெயரில் தடுப்பூசி திருவிழா ஏப்ரல் 11-14 வரை நாடு முழுவதும் நடைபெற்றது.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியான Sputnik V தடுப்பூசியை இந்தியாவில் அவசரக்கால பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தயாரிப்பு நிறுவனம் : Gamaleya Institute of Epidemiology and Microbiology
செயல்திறன் : 91.6 சதவீதம்.
காணொளியை காண கீழேயுள்ள Play பொத்தானை அழுத்தவும்.
மாதிரி வினாக்களை எழுதிப் பார்க்க கீழேயுள்ள Start the Quiz பொத்தானை அழுத்தவும்.