சர்வதேச நிகழ்வுகள்
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
ஈக்குவடார் நாட்டின் அதிபராக Guillermo Lasso என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கொசோவா நாட்டின் அதிபராக விஜோசா ஒஸ்மானி சத்ரியு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தென்கொரியாவின் புதிய பிரதமராக கிம் பூ-க்யூம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நைஜர் நாட்டின் புதிய பிரதமராக Ohoumoudou Mahamadou நியமிக்கப்பட்டுள்ளார்.
கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராவுல் காஸ்ட்ரோ விலகுவதாக அறிவித்ததையடுத்து அந்நாட்டின் அதிபர் மிகுவல் தியாஸ் கேனல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பதவிக்கு பிடல் காஸ்ட்ரோ குடும்பத்தினர் அல்லாதோர் வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
சமீபத்தில் ஜோர்டான் முடியரசின் 100வது ஆண்டு விழா 13/04/2021 அன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அந்நாட்டின் அரசர் மேதகு இரண்டாம் அப்துல்லாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அம்பேத்காரின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவரை கவுரவப்படுத்தும் வகையிலான தீர்மானத்தை நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ரோகித் கன்னா அறிமுகப்படுத்தினார்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் புதிய தலைவராக பில் நெல்சன் என்பவரை அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.
தானியங்கி வாகனங்களை சாலைகளில் இயக்குவதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ள உலகின் முதல் நாடு எனும் பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது.
பிராந்திய பொருளாதார கூட்டமைப்பின் (RCEP) திறந்த வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) நடைமுறைப்படுத்துவதற்கு முதல் நாடாக சிங்கப்பூர் ஒப்புதல் அளித்துள்ளது.
RCEP – Regional Comprehensive Economic Partnership
FTA – Free Trade Agreement
2025-ஆம் ஆண்டுக்குள் புகையிலை, சிகரெட் பயன்பாடு இல்லாத நாடாக நியூசிலாந்தை உருவாக்க, அந்நாட்டு அரசு செயல் திட்டங்களை அறிவித்துள்ளது.
2025ம் ஆண்டிற்குள் சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்கவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
2036ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக நீடிக்கும்படியிலான அரசியலமைப்பு திருத்த சட்டத்திருத்ததிற்கு அந்நாட்டு மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
2030ம் ஆண்டிற்குள் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 50 முதல் 52 சதவீதம் வரை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
2030ம் ஆண்டிற்குள் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 55 சதவீதம் வரை குறைக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் திட்டமிட்டுள்ளன.
ஆஸ்திரேலியா நாட்டை Seroja என்ற புயல் தாக்கியது.
இந்தோனேசியாவின் நீர்மூழ்கி கப்பலான KRI Nanggala-402 பாலித்தீவில் கடலுக்கடியில் நொறுங்கிய நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.
பார்வைக் குறைபாட்டிற்கு காரணமான Trachoma நோயினை முற்றிலும் ஒழித்துள்ள இரண்டாவது ஆப்பிரிக்க நாடு எனும் பெருமையை காம்பியா பெற்றுள்ளது.
முதல் ஆப்பிரிக்க நாடு : கானா
உலகின் முதல் நாடு : ஓமன்
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் முதல் நாடு : நேபாளம்.
இந்திய தயாரிப்பு கரோனாத் தடுப்பூசியான கோவாக்சினை அவசரக் காலப் பயன்பாட்டிற்கு பயன்படுத்த மெக்சிகோ அனுமதி அளித்துள்ளது.
யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக ஈரான் அரசு உயர்த்தியுள்ளது.
எகிப்தின் லக்ஸர் என்னுமிடத்தில் 3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நகரமானது கி.மு 1390 காலகட்டத்தில் எகிப்தை ஆட்சி செய்த அமன்ஹோடெப் III என்பவரது ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்றாம் அமன்ஹோடெப்பின் பேரன் துதன்முகன் மற்றும் துதன்முகனின் மகன் அய் ஆகியோர் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நகரத்திற்கு “The Rise of Athin” என்று பெயரிடப்பட்டுள்ளது.
BIMSTEC கூட்டமைப்பின் 5வது மாநாட்டை இலங்கை நடத்தவுள்ளது.
BIMSTEC: Bay of Bengal Initiative for Multi – Sectorial Technical and Economic corperation
உறுப்பு நாடுகள் ; இந்தியா, தாய்லாந்து, மியான்மர், நேபாளம்,பூட்டான், வங்கதேசம் மற்றும் இலங்கை.
Hope கூட்டமைப்பின் முதல் நோய்த் தடுப்பு மற்றும் தளவாடங்கள் உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நடைபெற்றது.
Boao Forum for Asia Annual Conference 2021 தென் சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள போவாவில் நடைபெற்றது.
Theme : “A World in Change: Join Hands to Strengthen Global Governance and Advance Belt and Road Cooperation”
முதல் முறையாக 2021ம் ஆண்டுக்கான United Nations Food Systems Summit செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடல் பகுதிக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதைத் தடுக்கும் தொழில்நுட்பத்தில் இணைந்து பணியாற்றும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஜெர்மனியும் கையெழுத்திட்டுள்ளன.
இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்திற்கும் (ICAI), ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பட்டய கணக்காளர் நிறுவனத்திற்கும் (CA ANZ) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ICAI – Institute of Chartered Accounts of India.
CA ANZ – Chartered Accounts of Australia and New Zealand.
இந்திய போட்டி ஆணையத்திற்கும் (CCI), பிரேசிலின் பொருளாதார பாதுகாப்புக்கான நிர்வாக கவுன்சிலுக்கும் (CADE) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
CCI – Competition Comission of India.
CADE – Administrative Commision for Economic Defence of Brazil.
சுங்க ஒத்துழைப்பு மற்றும் சுங்கத்துறை விஷயங்களில் பரஸ்பர நிர்வாக உதவியை மேற்கோள் இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இத்தாலி நாடானது, இந்தியாவில் தனது முதலாவது மெகா உணவு பூங்காத் திட்டத்தை குஜராத் மாநிலத்தின் மெக்சனா மாவட்டத்தில் உள்ள ஃபானிதார் என்னுமிடத்தில் அமைத்துள்ளது.
Project DANTAK என்ற பெயரிலான உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டமானது இந்திய அரசின் உதவியுடன் பூட்டான் நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது கடந்த ஏப்ரல் 21,2021 அன்று வைர விழாவினை எட்டியது.
இந்திய அரசின் சார்பில் நேபாள நாட்டிற்கு 39 ஆம்புலன்ஸ்கள் கடந்த ஏப்ரல் 22,2021 அன்று வழங்கப்பட்டன.
இந்திய கடற்படை கப்பலான INS Ranvijay நல்லெண்ண அடிப்படையில் 3 நாள் பயணமாக கடந்த ஏப்ரல் 14 அன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டது.
காணொளியை காண கீழேயுள்ள Play பொத்தானை அழுத்தவும்.
மாதிரி வினாக்களை எழுதிப் பார்க்க கீழேயுள்ள Start the Quiz பொத்தானை அழுத்தவும்.