மார்ச் 2021 நடப்பு நிகழ்வுகள் – ஐ.நா நிகழ்வுகள்

ஐ.நா நிகழ்வுகள்

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

TNPSC March 2021 United Nations Current Affairs in Tamil

2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

2018 முதல் 2028 வரையிலான தசாப்தத்தை தண்ணீருக்கான தசாப்தமாக ஐ.நா அறிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் ஆலோசனைக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை அஜய் மல்ஹோத்ரா பெற்றுள்ளார்

ஐ.நா வளர்ச்சித் திட்டமானது (UNDP) கிராமப்புற இந்தியாவில் பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில்முனைவை மேம்படுத்துவதற்காக ‘சகி திஷா’ என்றத் திட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்த திட்டமானது UNDP மற்றும் IKEA இடையிலான 5 ஆண்டு ஒப்பந்தமாகும்.

டெல்லி NCR, ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார வாய்ப்பை ஏற்படுத்தவுள்ளது.

ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்திர உறுப்பினராகும் இந்தியாவின் முயற்சிக்கு போர்ச்சுக்கல் நாடு முழு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளது.

ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் மார்ச் 23 அன்று நடைபெற்ற இலங்கை மீதான போர்க்குற்ற தீர்மான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தது. இருப்பினும் இந்த தீர்மானமானது வெற்றி பெற்றுள்ளது.

தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நாடுகளின் எண்ணிக்கை : 22.

தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நாடுகளின் எண்ணிக்கை : 11.

 

காணொளியை காண கீழே உள்ள Play பொத்தானை அழுத்தவும்.
Print Friendly and PDF

Post a Comment

0 Comments