மார்ச் 2021 நடப்பு நிகழ்வுகள் – விளையாட்டு நிகழ்வுகள்

விளையாட்டு நிகழ்வுகள்

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

TNPSC March 2021 Sports Current Affairs in Tamil

6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை திசாரா பெரேரா பெற்றுள்ளார்.

மகளிருக்கான ICC T20 தரவரிசை பட்டியலில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

சர்வதேச பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மிதாலி ராஜ் படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இலக்கை துரத்தும் போது தொடர்ச்சியாக 10 அரை சதங்களை விளாசியவர் என்ற புதிய சாதனையை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டியில் 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.

விராட் கோலிக்கு அடுத்தபடியாக சர்வதேச டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணியின் மார்டின் குப்தில் 99 போட்டிகளில் 2839 ரன்களுடனும், ரோகித் சர்மா 109 போட்டிகளில் 2773 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்

சர்வதேச டி20 போட்டிகளில் 100 சிக்ஸர்களை அடித்த முதல்   ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் படைத்துள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 100 சிக்சர்கள அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 100 சிக்சர்கள அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ் கெய்ல் படைத்துள்ளார்.

டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் குறித்த தகவல்கள் பின்வருமாறு

மார்டின் கப்தில் (135) - நியூசிலாந்து

ரோகித் சர்மா (127) - இந்தியா

இயன் மோர்கன் (117) - இங்கிலாந்து

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இணைந்து 5,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினர்.

இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலிக்கு அடுத்தபடியாக ஒருநாள் கிரிக்கெட்டில் பாட்னர்ஷிப்பில் 5,000 ரன்களை எட்டும் இரண்டாவது இந்திய இணை என்ற சாதனையைப் படைத்துள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்து இந்தியா - இங்கிலாந்து அணியினர் புதிய சாதனை படைத்துள்ளனர்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3 ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 70 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து வீரர்கள் 37 சிக்ஸர்களும் இந்திய வீரர்கள் 33 சிக்ஸர்களும் அடித்துள்ளனர்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ஒட்டுமொத்த டி20 போட்டிகளிலும் சேர்த்து 9 ஆயிரம் ரன்களை குவித்த 2-வது இந்திய வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.

முதலிடத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 9,650 ரன்களுடன் உள்ளார்.

சமூக வலைத்தளமான Instagram தளத்தில் 100 மில்லியன் ரசிகர்களைக் கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் என்கிற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

ICC-யின் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய சுழற்பந்து வீச்சாளர் "ரவிச்சந்திரன் அஸ்வின்" வென்றுள்ளார்.

BBC-யின் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது செஸ் விளையாட்டு வீராங்கனையான கொனேரு ஹம்பிக்கு வழங்கப்பட்டுள்ளது.

வாழ்நாள் சாதனையாளர் விருது – அஞ்சு பாபி ஜார்ஜ் (நீளம் தாண்டுதல்).

வளர்ந்து வரும் வீராங்கனை விருது – மனு பார்கர் (துப்பாக்கி சுடுதல்).

விஜய் ஹசாரே 2021 கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் மும்பை அணியானது உத்திரப் பிரதேச அணியை வீழ்த்தி நான்காவது முறையாக கோப்பையை வென்றுள்ளது.

உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் முதல் முறையாக ரஷ்ய வீரர் டேவிட் மெட்விடேவ் ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இதன் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் 4 முன்னணி வீரர்களைத் தவிர்த்து 2 வது இடத்தினைப் பிடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராக தாமஸ் பேச் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் சுடரை கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற ஜப்பான் மகளிர் கால்பந்து அணியைச் சேர்ந்த வீராங்கனை அசுஷா இவாஷிமிசு ஏற்றி சுடர் ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இயற்கை, செயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்பட்ட புகுஷிமாவில் இருந்து ஒலிம்பிக் சுடர் ஓட்டம் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமையை தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி பெற்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னில் விளையாட்டு வீரர்களான ஷரத் கமல், சத்யன் ஞானசேகரன் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு கேரளத்திலுள்ள பட்டியாலாவை சேர்ந்த தடகள வீரரான முரளி ஸ்ரீசங்கர் நீளம் தாண்டுதல் பிரிவில் தேர்வு பெற்றுள்ளார்.

நீளம் தாண்டுதலில் சீனியர் பிரிவில் பங்குபெற்ற முரளி ஸ்ரீசங்கர் நிர்ணயிக்கப்பட்ட 8.22 மீட்டர் நீளத்தைத் தனது முழு ஆற்றலையும் பயன்படுத்தி 8.26 மீட்டர் நீளம் தாண்டி தங்கம் பதக்கம் வென்று சாதனைப்படைத்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவின் வட்டு எறிதல் வீராங்கனையான கமல்பிரீத் கவுர் தகுதி பெற்றுள்ளார். தடகளத்தில் தனிநபர் பிரிவில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற 10-வது இந்தியர் ஆவார்.

தகுதி இலக்கு : 63.5மீ

எறிந்த தூரம் : 65.06மீ

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த சரத் கமல் மற்றும் மணிகா பத்ரா இணை தகுதி பெற்றுள்ளது.

24-வது பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்றது.

100மீ ஓட்டப் பந்தயத்தில் தேசிய வீராங்கனை டூட்டி சந்தை முந்தி, முதலிடம் பிடித்து தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த எஸ்.தனலட்சுமி சாதனைப் படைத்துள்ளார். ஒடிசாவின் டூட்டி சந்தை விட (11.58) குறைந்த விநாடிகளில் ஓடி (11.39) 'அதிவேக பெண்மணி' என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

மேலும் 200 மீட்டர் ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் 23.26 நொடிகளில் முடித்து, 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்துள்ளார்.

100மீ ஒலிம்பிக் தகுதி நேரம் (பெண்கள்) : 11.15 விநாடிகள்

100மீ ஒலிம்பிக் தகுதி நேரம் (ஆண்கள்) : 10.05 விநாடிகள்

கர்நாடகாவில் நடைபெற்ற கம்பளா போட்டியில் சீனிவாசகவுடா 100 மீட்டர் தூரத்தை 8.96 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற ஜமைக்காவின் உசேன் போல்ட் இலக்கை 9.58 வினாடிகளில் கடந்ததே இதுவரை உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் முன்னாள் வீரர்கள் மற்றும் சாம்பியன்கள் குழுவின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த மேரிகோம் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 15 தங்க பதக்கங்களுடன் 30 பதக்கங்களை  வென்று இந்தியா முதலிடம் பிடித்தது. அமெரிக்கா மற்றும் இத்தாலி முறையே 2 மற்றும் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது..

YONEX SWISS OPEN 2021 பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் P.V சிந்து வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார்.

இலங்கையிலுள்ள தலைமன்னார் முதல் தமிழகத்திலுள்ள தனுஷ்கோடி வரையிலான (30 கி.மீ) பாக் ஜலசந்தி கடலை 13 மணி நேரம் 40 நிமிட நேரத்தில் நீந்தி கடந்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை தெலங்கானாவைச் சேர்ந்த சியாமளா கோலி பெற்றுள்ளார்.

பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்த 13-வது நபர், உலகளவில் இரண்டாவது பெண், இந்திய அளவில் முதல் பெண் என்ற பெருமையை சியாமளா கோலி பெற்றார்..

ஆப்பிரிக்காவின் மிக உயரமான கிளிமஞ்சாரோ மலையில் உள்ள கில்மன் சிகரம் மீது ஆந்திராவைச் சேர்ந்த 9 வயது சிறுமி ரித்விகா ஸ்ரீ ஏறி சாதனை படைத்துள்ளார்.

இந்த சிகரமானது கடல் மட்டத்தில் இருந்து 5,681 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த சாதனையின் மூலம் கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறிய உலகின் இரண்டாவது நபர் மற்றும் ஆசியாவின் முதல் நபர் என்ற பெருமையையை ரித்விகா ஸ்ரீ பெற்றுள்ளார்.

தமிழக காவல்துறையில் இருந்து முதல் முறையாக அகில இந்திய ஆணழகன் போட்டிக்கு புருஷோத்தமன் தேர்வாகியுள்ளார்.

தமிழக அளவிலான, 46-வது துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நடிகர் அஜித் குமார் தங்கம் வென்றுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் குமார் மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளார்.

 

காணொளியை காண கீழே உள்ள Play பொத்தானை அழுத்தவும்.
மாதிரி வினாக்களை எழுதிப் பார்க்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.
Print Friendly and PDF

Post a Comment

0 Comments