மார்ச் 2021 நடப்பு நிகழ்வுகள் – இராணுவம் மற்றும் பாதுகாப்பு

இராணுவம் மற்றும் பாதுகாப்பு

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

TNPSC March 2021 Military and Defence Current Affairs in Tamil

பாதுகாப்பு துறையில் இந்தியாவின் முதல் முன்னுரிமை கூட்டாளி நாடாக இலங்கையை இந்தியா அறிவித்துள்ளது.

Operation Thiruvallur என்ற பெயரிலான, ராணுவ நடவடிக்கையின் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பல ஆண்டுகளாக கவனக்குறைவாக சேகரிக்கப்பட்டிருந்த 10 டன் போர்த்தளவாடங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டது.

அமெரிக்க கடற்படையானது பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகியவற்றுடன் இணைந்து ஓமன் வளைகுடா அருகே “அரபிக்கடல் குழு போர்ப்பயிற்சி”-யை நடத்தவுள்ளது.

PASSEX என்ற கூட்டு கடற்படை ஒத்திகையானது இந்திய கடற்படை மற்றும் ராயல் பக்ரைன் கடற்படை இணைந்து பாரசீக வளைகுடாப் பகுதியில் ‘ஆபரேஷன் சங்கல்ப்’ - ன் கீழ் இந்த ஒத்திகையானது நடைபெற்றது.

இந்த ஒத்திகையில் பங்கேற்ற இந்திய போர்க்கப்பல் – INS Talwar.

PASSEX எனப்படும் இந்தியாஅமெரிக்கா இடையிலான இரண்டு நாள் கூட்டு கடற்படை பயிற்சி கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் முதல் முறையாக இந்திய விமானப்படை விமானங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த பயிற்சியில் பங்கேற்ற இந்திய போர்க்கப்பல் – Shivalik.

இந்த பயிற்சியில் பங்கேற்ற நீண்டதூர கண்காணிப்பு போர் விமானம் – P8I.

Pabbi – Anti – Terror 2021 எனப்படும் கூட்டு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியானது இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பினரால் (SCO) நடத்தப்பட்டது.

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற பிராந்திய பயங்கரவாத எதிப்பு கட்டமைப்பு கவுன்சிலின் 36-வது கூட்டத்தின் போது இந்த கூட்டுப்பயிற்சியானது அறிவிக்கப்பட்டது.

SAARC என்பது காத்மாண்டுவைத் தலையையிடமாகக் கொண்ட எட்டு உறுப்பு நாடுகளின் பலதரப்பு சங்கமாகும்.

Exercise Desert Flag - VI என்ற விமானப் போர் பயிற்சியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமான தளத்தில் நடைபெற்றது.

இந்திய விமானப்படையானது Su – 30MKI போர் விமானங்களுடன் இந்த பயிற்சியில் முதல் முறையாக பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை தவிர இந்த பயிற்சியில் இணைந்துள்ள மற்ற நாடுகள் : அமெரிக்கா, பிரான்ஸ், சவூதி அரேபியா மற்றும் பக்ரைன்.

பார்வையாளர் படைகளாகப் பங்கேற்ற நாடுகள் : ஜோர்டான், கிரீஸ், கத்தார், எகிப்து மற்றும் தென்கொரியா.

DUSTLIK II இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இணைந்து மேற்கொள்ளும் ராணுவப் பயிற்சியின் இரண்டாவது பதிப்பானது உத்தரகாண்ட் மாநிலத்தின் ராணிகேட் என்ற இடத்தில் நடைபெற்றது.

இந்த ராணுவ கூட்டுப்பயிற்சியின் முதல் பதிப்பானது 2019 ஆம் ஆண்டு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

காணொளியை காண கீழே உள்ள Play பொத்தானை அழுத்தவும்.
Print Friendly and PDF

Post a Comment

0 Comments