சர்வதேச நிகழ்வுகள்
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
தான்சானியாவின் முதல் பெண் பிரதமராக Samia Suluhu Hassan என்பவர் பதவியேற்றுள்ளார்.
பிரேசிலின் புதிய சுகாதார அமைச்சராக மார்செலோ குயிரோகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா நாட்டிற்கான புதிய இந்திய தூதராக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் நாட்டிற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் தூதராக முகம்மது அல் காஜா பொறுப்பேற்றுள்ளார்.
வங்காளதேசத்தின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராக தாஷ்னுவ அனன் ஷிஷிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் முதல் முறையாக சுகாதார துறை இணையமைச்சராக டாக்டர் ரேச்சல் லெவின் என்ற திருநங்கை நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் சுகாதாரத்துறையின் உயர் பதவியான Surgeon General பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் துணை உதவியாளராகவும், வெள்ளை மாளிகை இராணுவ ஆலோசனை அலுவலகத்தின் இயக்குநராகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த Maju Varghese நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் குற்றவியல் துறையின் சிறப்பு உதவியாளராக சிராக் பெயின்ஸ் (Chirag Bains) நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தொழிலாளர் மற்றும் தொழிலாளர்களுக்கான சிறப்பு உதவியாளராக ப்ரோனிதா குப்தா (Pronita Gupta) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகின் முதல் கப்பல் சுரங்கம் நார்வே நாட்டில் கட்டப்படவுள்ளது.
உலகின் மிகப்பெரிய சூரியப் பண்ணை சிங்கப்பூரில் கட்டப்பட்டு வருகிறது.
உலகின் முதல் காற்றில் இருந்து குடிநீர் தயாரித்து வழங்கும் நடமாடும் தானியங்கி வழங்கி (Kiosk) மற்றும் தண்ணீர் அறிவு மையம் (Water Knowledge Centre) ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் MEGHDOOT Solution யை பயன்படுத்தி Maithri Aquatech என்ற நிறுவனத்தின் மூலம் அமைக்கப்படவுள்ளது.
உலகின் முதல் பிளாட்டிபஸ் சரணாலயத்தை ஆஸ்திரேலியா உருவாக்கி வருகிறது.
இந்த சரணாயமானது ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள தரோங்கா விலங்கியல் பூங்காவில் உருவாக்கப்படவுள்ளது.
உலகின் முதல் பதிவு செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசியான ரஷ்யாவின் “ஸ்புட்னிக் வி” தற்போது 50 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
20 கோடி எண்ணிக்கையில் இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க பெங்களூரைச் சேர்ந்த ஸ்டெலிஸ் பயோபர்மா (Stelis Biopharma) என்ற நிறுவனத்துடன் ரஷ்ய நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஏற்கனவே, ஹைதராபாத்தை சேர்ந்த Gland Pharma, Hetero Biopharma ஆகிய நிறுவனங்கள் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் முதல் தொழில்முறை விண்வெளி வீரர்கள் இல்லாமல் பொதுமக்கள் மட்டுமே பங்கெடுக்கும் விண்வெளித் திட்டத்துக்கு உலகில் முதல்முறையாக ஒரு எலும்பு புற்றுநோயாளியாக இருந்து மீண்ட ஹேலி ஆர்சினோ என்ற விண்வெளி வீராங்கனை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதோடு செயற்கை உடல் பாகங்களோடு விண்வெளியில் பறக்கப் போகும் முதல் நபர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரராகப் போகிறார்.
கடைசியாக பூமியைச் சுற்றி வரப் போகும் இளம் அமெரிக்கரும் இவரே
அமீரகத்தின் மிகப்பெரிய சரக்கு கப்பல் என்ற பெருமையை M.V.ஹபீத் பெற்றுள்ளது.
தீராத நோயுடன் அவதிபடுபவர்களை மறைமுகமாக கருணைக்கொலை செய்யும் சட்டத்திற்கு ஸ்பெயின் நாட்டின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இத்துடன் நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்பேர்க் ஆகிய நாடுகளின் வரிசையில் மறைமுக கருணைக்கொலைக்கு ஒப்புதல் அளித்துள்ள நான்காவது ஐரோப்பிய நாடானது ஸ்பெயின்.
தைவானில் இருந்து சீனாவிற்கு அன்னாசிப்பழம் இறக்குமதி செய்வது மீதான தடைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தைவான் அரசானது ட்விட்டரில் “Freedom Pineapple” என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியது.
கஜுராஹோவில் Maharaja Chhatrasal Convention Centre – யை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேல் திறந்து வைத்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் Swadesh Dharshan திட்டத்தின் கீழ் இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பினால் மலேரியா ஒழிப்பு சான்றிதழ் பெற்றுள்ள முதல் நாடு என்ற பெருமையை மத்திய அமெரிக்க நாடான எல் சால்வேடார் பெற்றுள்ளது.
குறைந்தது 3 ஆண்டுகளுக்கு மலேரியா நோய் பரவலை தடுக்கும் நாடுகளுக்கு இந்த சான்றிதழானது வழங்கப்படுகிறது.
இத்தாலியில் உள்ள பாம்பெய் நகரத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான தேர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டத்தில் மதிப்புறு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பை ஏற்று நரேந்திர மோடி வங்கதேச பயணம் மேற்கொண்டார்.
வங்கதேசம் சுதந்திரம் அடைந்த ஆண்டு – 1971.
வங்கபந்து ஷேக் முஜிபுர் ரகுமான் பிறந்த ஆண்டு – 1920.
வங்கதேச பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்திய விமானம் – ஏர் இந்தியா ஒன் (அ) போயிங் 777 (இந்தியாவின் முதல் VVIP விமானம்).
மேலும் இந்த பயணத்தின்போது இந்திய – வங்கதேச நாடுகளுக்கிடையே வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய துறைகளில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தகள் கையெழுத்தாகின.
இந்தியா - வங்கதேசம் எல்லையில் பாயும் ஃபெனி நதி மீது கட்டப்பட்டுள்ள மைத்ரி சேது பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இந்திய தூதரகத்தின் இரண்டாவது கலாச்சார மையத்தை இந்திய வெளி விவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வங்கதேசத் தலைநகர் டாக்காவில் திறந்து வைத்தார்.
முதலாவது மையம் டாக்காவில் உள்ள இந்திராகாந்தி கலாச்சார மையம் .
பஹாமாஸ் நாட்டில் ரஷிய மொழி பொறிக்கப்பட்ட 41 கிலோ எடையுள்ள டைட்டானியம் பந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் கூட்டமைப்பின் உயர்மட்டத் தலைவர்கள் கலந்துகொள்ளும் (QUAD Summit) முதலாவது உச்சி மாநாடு மார்ச் 12 அன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.
இந்த நான்கு நாடுகள் அமைப்பு (QUAD) உருவாக்கப்பட்ட ஆண்டு – 2004
பின்னர் இந்த அமைப்பு முறைப்படுத்தப்பட்ட ஆண்டு – 2007
இந்த அமைப்பானது ஆசியாவின் நேட்டோ என்றழைக்கப்படுகிறது.
முதலாவது மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் : ஜோ பைடன், நரேந்திர மோடி, ஸ்காட் மோரிசன், யோஷிகிடே சுகா.
2021-ம் ஆண்டுக்கான 9வது ஆசியாவின் இதயம் மாநாடு தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் துஷன்பேவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
“ஆசியாவின் இதயம்” என்ற பெயரில் ஆசிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் இடையே முதல் மாநாடானது கடந்த 2011ம் ஆண்டு துருக்கியில் நடைபெற்றது.
இந்தியாவுடன் சர்வதேச சூரிய கூட்டணியில் (ISA) திருத்தப்பட்ட கட்டமைப்பின் ஒப்பந்தத்தில் இத்தாலி கையெழுத்திட்டுள்ளது.
நேபாளத்தின் தேசிய மருந்து ஒழுங்காற்று ஆணையம் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
சர்வதேச அளவில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கும் மூன்றாவது நாடு நேபாளம் ஆகும்.
ஏற்கனவே இந்தியா மற்றும் ஜிம்பாவே ஆகிய நாடுகளில் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கோவாக்சின் தடுப்பூசியை அங்கீகரித்த முதல் ஆப்பிரிக்க நாடு ஜிம்பாப்வே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) மற்றும் ஆப்கானிஸ்தானின் சுயாதீன நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் குடிமைப்பணிகள் ஆணையம் (IARCSC) ஆகியவற்றுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
UPSC - Union Public Service Commission
IARCSC - Independent Administrative Reforms and Civil Services Commission.
விவசாயம் மற்றும் அது சார்ந்த துறையில் இந்தியா – பிஜி குடியரசு இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நீர்வளத் துறையில் இந்தியா – ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
விண்வெளித் துறையில் இந்தியா – ஜப்பான் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் இஸ்ரோ மற்றும் ஜப்பான் நாட்டின் ஜாக்சா அமைப்புகளுக்கிடையே கையெழுத்தானது.
நிலவு குறித்து ஆராய்ச்சி செய்வதற்கான நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் சீனா மற்றும் ரஷ்யா இடையே கையெழுத்தாகியுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் தொழில்நுட்பப் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதன்மூலம் இந்தியா வரும் 2030-ம் ஆண்டுக்குள் 450GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை உருவாக்கும் இலக்கை அடைய முடியும்.

0 Comments