பிப்ரவரி 2021 நடப்பு நிகழ்வுகள் – தமிழக நிகழ்வுகள்

தமிழக நிகழ்வுகள்

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

TNPSC February 2021 Current Affairs Tamilnadu News in Tamil

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் படைத்தளபதியாக விளங்கி தீரத்துடன் செயல்பட்ட வீரன் பொல்லானுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை சரணாலயம் இந்தியாவின் 51 வது மற்றும் தமிழகத்தின் 5வது புலிகள் சரணாலயமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திலிருந்து பிரித்து இந்த புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் கும்முனூர் கிராமத்தில் 37 ஏக்கர் பரப்பளவில் புதியதாக வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டயப்படிப்புகளுக்கான புதிய வேளாண் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பணியாளர்கள் ஓய்வு பெரும் வயதை 59 – ல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.7,700 ஊதியத்திலிருந்து ரூ.10,000மாக உயர்த்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன் பணமானது ரூ.20 இலட்சத்திலிருந்து ரூ.40 இலட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 46 இணைய குற்றபிரிவு காவல் நிலையங்கள் திறப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 05 : இணைய பாதுகாப்பு தினம்.

இணைய குற்றம் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாமிடம் பிடித்துள்ளது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்காவை சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசலில் முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் ரூ.78 கோடியில் உணவு பூங்கா அமைப்பதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

சிவகங்கை மாவட்டம் கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார்.

தமிழகத்தில் ஐஎஸ்ஓ சான்று பெறும் முதல் அரசுப் பள்ளி என்ற பெருமையை, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்துள்ள ஆவணத்தாங்கோட்டை பள்ளி பெற்றுள்ளது.

ICICI வங்கியானது சென்னையில் மாநகராட்சியுடன் இணைந்து நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

பட்டியல் இனத்தில் உள்ள 6 பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்வதற்கு தமிழக அரசானது கடந்த மார்ச் 2020ல் மூத்த ஆட்சி பணி அலுவலர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. பின்னர் பல்வேறு தரபினருடைய கோரிக்கைகள் மற்றும் சென்னை பல்கலைக்கழக மானுடவியல் அறிக்கைகளை கருத்தில் கொண்டு மாநிலப் பட்டியலினத்தில் உள்ள வாதிரியான் உட்பிரிவையும் உள்ளடக்கி தேவேந்திர குலத்தான், கடையன், காலடி, குடும்பன், பல்லன், பன்னாடி ஆகிய 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட பரிந்துரைத்தது.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து பற்றி விசாரிக்க முன்னாள் நீதிபதி கே.கண்ணன் தலைமையிலான விசாரணைக் குழுவினை தமிழக அரசு அமைத்துள்ளது.

கணக்கு தணிக்கையாளர் தேர்வில் சேலம் மாணவர் இசக்கிராஜா அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சென்னை தரமணி, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 73வது தமிழாய்வு பெருவிழா நடைபெற்றது. இதனை துணை முதல்வர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

மூன்றாவது உலக திருக்குறள் மாநாடானது தஞ்சாவூரில் நடைபெற்றது

13வது யானைகள் நலவாழ்வு முகாமானது கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.

கடந்த 2016 மே 25-ம் தேதி தொடங்கி 2021 பிப்ரவரி 27-ம் தேதி வரை 15-வது சட்டப்பேரவையின் 10 கூட்டத் தொடர்கள் நடந்துள்ளன. தமிழக சட்டப்பேரவையில் மிக அதிக காலம் (9 ஆண்டுகள்) பேரவைத் தலைவராக பி.தனபால் பணியாற்றியுள்ளார்.

தமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினமானது பிப்ரவரி 09 ல் அனுசரிக்கப்பட்டது.

கிருபானந்தவாரியார் பிறந்த நாளான ஆகஸ்ட் 25 அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆருக்கு பொன்மனச் செம்மல் பட்டத்தை வழங்கியவர் கிருபானந்தவாரியார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் ரூ1,000 கோடி செலவில் ஐ.ஐ.டி. டிஸ்கவரி வளாகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.

ராமநாதபுரம்  - தூத்துக்குடி இடையே ரூ 700 கோடி மதிப்பில் அமையவுள்ள இயற்கை எரிவாயு குழாய் இணைப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

ரூ31,500 கோடி மதிப்பில் நாகைப்பட்டினத்தில் அமையவுள்ள காவிரி படுகை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

 

காணொளியை காண கீழே உள்ள Play பொத்தானை அழுத்தவும்.
மாதிரி வினாக்களை எழுதிப் பார்க்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.
Print Friendly and PDF

Post a Comment

0 Comments