மாநில நிகழ்வுகள்
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
58 ஆண்டுகளுக்கு பிறகு நாகாலாந்து சட்டப் பேரவையில் முதல் முறையாக தேசிய கீதம் பாடப்பட்டது.
அனைத்து கிராமப்புற வீடுகளிலும் 100 சதவீத குடிநீர் குழாய் நீர் வழங்கல் இலக்கை அடைவதற்கான அரசாங்கத்தின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் ‘Har Ghar Pani, Har Ghar Safai’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பஞ்சாப் மாநில அரசானது சொத்து உரிமைகளைக் கண்காணிக்கும் வகையில் அனைத்து கிராமங்களிலும் "Lal Lakir" திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
நிலம் வைத்திருப்பவர்களை அடையாளம் காண்பதற்கான 16 இலக்க ஒற்றைக் குறியீட்டை உத்திரப் பிரதேச மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது.
நிமோனியா காரணமாக ஏற்படும் குழந்தைகள் இறப்பை குறைக்கும் நோக்கில் மத்திய பிரதேசம் "SAANS" என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் 'Jalabhishegam' என்ற பிரச்சாரத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்காக "Switch Delhi" என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
2024க்குள் டெல்லியில் மொத்த வாகனப் பதிவுகளில் 25% மின்சார வாகனங்கள் என்ற இலட்சிய இலக்கை டெல்லி அரசு நிர்ணயித்துள்ளது.
புதுச்சேரி அரசானது கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் "Zero Covid by Feb28" என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது.
ஒடிசா மாநிலமானது ‘COVID Warrior Memorial’ யை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக புவனேஸ்வரில் உள்ள 'Biju Patnaik Park' தேர்வு செய்யப்பட்டுள்ளது.
‘Mukhyamantri Vigyan Pratibha Pariksha’ திட்டத்திற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
‘ஒரு ரூபாய்க்கு சொந்த வீடு’ வழங்கும் திட்டத்திற்கு ஆந்திரப்பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
"SKOCH CM of the Year" விருதானது ஆந்திர மாநில முதல்வர் Y.S.Jagan Mohan Reddy-க்கு வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க அரசானது ஏழை மக்களுக்கு ரூபாய் 5 க்கு உணவு வழங்கும் "மா" (Maa) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேகாலயா காவல்துறை E-Chellan வழங்குவதற்காக SBI உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மர பொம்மைகள், உள்ளூர் கலைப்பொருட்கள், கைவினைப்பொருட்கள் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக Flipkart உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மகாராஷ்டிரா கையெழுத்திட்டுள்ளது.
கர்நாடகா மாநில தோட்டக்கலை துறையானது "மலர்கள் பதப்படுத்தும் மையம்" (Flower Processing Centre) அமைக்க இந்தியாவின் முதல் மற்றும் ஒரே மலர் ஏல மையமான பெங்களூரின் சர்வதேச ஏல மையத்துடன் இணைந்து செயல்படவுள்ளது. இந்தியாவில் மொத்த மலர் உற்பத்தியில் 75% கர்நாடகாவில் உள்ளது.
கோவாவை மீன்வள மையமாக்க ரூ.400 கோடி முதலீடு செய்யப்படவுள்ளதாக மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் 31வது மாவட்டமாக விஜயநகரம் மாவட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் ஹோஷங்காபாத் நகரம் நர்மதாபுரம் என பெயர் மாற்றப்படும் என அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
கேரளத்தின் முதல் தாய்பால் வங்கியானது எர்ணாகுளத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.சைலஜா தொடங்கி வைத்துள்ளார்.
ஆகஸ்டு 01 - உலக தாய்ப்பால் தினம்.
ஆகஸ்டு 01 முதல் 07 உலக தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது.
பெண்கள் பணியாற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாப்கின் வழங்கும் இயந்திரங்களையும், நாப்கினை எரிக்கும் இயந்திரங்களையும் நிறுவ கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு நேரடியாக ஊதியத்தொகையை வழங்குவதற்காக E-Kuber Payments System என்ற புதிய திட்டமானது ஜம்மு காஷ்மீரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குஷி நகர் விமான நிலையமானது சர்வதேச விமான நிலையத்திற்கான உரிமத்தை DGCA விடம் இருந்து பெற்றுள்ளது. இதன் மூலம் உத்திரப் பிரதேச மாநிலத்தின் 3வது சர்வதேச விமான நிலையமானது. ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் 2 விமான நிலையங்கள் :
Chaudhary Charan Singh International Airport at Lucknow
Lal Bahadur Shastri International Airport at Varanasi.
சத்தீஸ்கர் மாநிலத்தில், பழங்குடியினர் பகுதியில் ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்களை ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்வதற்கான 'CHIRAAG' திட்டத்திற்கு உலக வங்கி 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அரசும் சத்தீஸ்கர் அரசும் கையெழுத்திட்டுள்ளன.
அசாம் மாநிலம் சோனித்பூரில், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட சாலைகளுக்கான "அசாம் மாலா" என்ற மெகா திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியிலிருந்து கிரண் பேடி நீக்கம். அவருக்குப் பதிலாக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுவை மாநில துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியின் 5வது பெண் துணை நிலை ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக தமிழில் உறுதிமொழி ஏற்று பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். இவருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதுச்சேரி முதல்வர் பதவியை நாராயணசாமி ராஜினாமா செய்துள்ளார்.
சபாநாயகர் : சிவக்கொழுந்து
ஆளுநர் : தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
விதி 356 : மாநில நெருக்கடி நிலை
முதல் முதலில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் : பஞ்சாப்
11வது "Rashtriya Sanskriti Mahotsav" மேற்கு வங்கத்தில் அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தாங்கர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.