விளையாட்டு நிகழ்வுகள்
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
அகில இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் தலைவராக துஷ்யந்த் சவுதாலா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அகில இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவராக அஜய்சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுச்செயலாளராக அசாமைச் சேர்ந்த ஹேமந்த் குமார் கவிதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழக கூடைப்பந்து கழகத்தின் செயலாளரான ஆதவ் அர்ஜுனா அகில இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவராக கோவையை சேர்ந்த இன்ஜினீயர் சந்திரசேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய பாரா ஒலிம்பிக் சங்க தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளவர் - தீபா மாலிக்
IPL ஏல வரலாற்றிலேயே அதிக விலைக்கு (ரூ.16.25 கோடி) தேர்வான வீரர் என்கிற பெருமையை தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் பெற்றுள்ளார். இவரை ராஜஸ்தான் அணி தேர்வு செய்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய துணைத்தலைவராக இம்ரான் குவாஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்த உபுல் தரங்கா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஐசிசியின் ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரராக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோடேரா ஸ்டேடியத்தின் பெயர் நரேந்திர மோடி விளையாட்டரங்கம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஒரு முனை ரிலையன்ஸ் எனவும், மற்றொரு முனை அதானி எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இஷாந்த் சர்மா படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அளவில் அதிவேகமாக (77 போட்டிகளில்) 400 விக்கெட்கள் வீழ்த்தி தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் சாதனைப் படைத்துள்ளார்.
இதன் மூலம் கும்ப்ளே, கபில் தேவ் மற்றும் ஹர்பஜன் சிங்குக்கு அடுத்தபடியாக 400 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய நான்காவது இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 200 இடதுகை பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்து புதிய வரலாற்று சாதனையை தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் படைத்துள்ளார்.
உள்நாட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் அனில் கும்ளே 350 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தாற்போல் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் இடம் பெற்றுள்ளார்.
இரண்டாவது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டி, ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் தொடங்கியது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
உலக பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்ட முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஆஞ்சல் தாகுர் படைத்துள்ளார்.
82 வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடைப்பெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஜி.சத்யன் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
உலக பாரா தடகள கிராண்ட்ப்ரீ போட்டியானது துபையில் நடைபெற்றது.
மகளிருக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீராங்கணை நிமிஷா சுரேஷ்.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் பிரிவில் அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபர் ப்ராடியை வீழ்த்தி 2 வது முறையாக ஜப்பானை சேர்ந்த நவாமி ஒசாகா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இது ஒட்டுமொத்தமாக அவரின் 4வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் செர்பியா வீரர் நோவாக் ஜோகோவிச் 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஆஸ்திரேலியா ஓபன் போட்டியில் இது 2வது முறையாக ஹாட்ரிக் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
ஒட்டு மொத்தமாக இது அவரின் 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.
ஆஸ்திரேலியா ஓபன் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் உலகின் முதல் நிலை வீரராக தன்னை தக்க வைத்துள்ளார்.
மார்ச் 8 வரை அதே இடத்தில் நீடிப்பதன் மூலம் உலகின் முதல் நிலை வீரராக 311 வாரங்கள் இருந்த வீரர் என்ற புதிய சாதனையை ஜோகோவிச் படைத்துள்ளார்.

0 Comments