இந்திய நிகழ்வுகள்
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் முதல் "பாலின பூங்கா" (Gender Park) கேரள மாநிலம் ஆலப்புழாவில் அமைந்துள்ளது.
இந்தியாவிலேயே முதல் முதலாக மீனவர்களுக்காக கடல் ஓசை 90.4 என்ற பண்பலைத் தமிழகத்தில் ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதலாவது கடலுக்கடியிலான சுரங்கமானது மும்பையில் கட்டப்பட்டு வருகிறது.
இந்தியாவின் முதலாவது குளிரூட்டப்பட்ட ரயில் நிலையம் எனும் பெருமையை கர்நாடக மாநிலம் பெங்களூரிலுள்ள M.விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையம் பெற்றுள்ளது.
இந்தியாவின் முதலாவது பிரத்யேக சாகரிகா சர்வதேச கப்பல் முனையத்தை கேரள மாநிலம் கொச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இந்தியாவின் முதல் தொழில் வழித்தடமாக தில்லி – மும்பை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக நீளமான பாலமானது அசாம் மாநிலத்தில் துப்ரி – புல்புரி இடையே பிரம்மபுத்ரா ஆற்றின் மீது ரூ.4000 கோடி மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிக நீளமான (12Km) வனவிலங்கு பாதுகாப்பு பாதை எனும் பெருமையை டில்லி – டேராடூன் எக்ஸ்பிரஸ்வே பெறவுள்ளது.
மாற்றுத்திறனாளி நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்தியாவில் முதல் முறையாக "Amputee Clinic" சண்டிகரில் தொடங்கப்பட்டுள்ளது.
ஈரநிலங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான நாட்டின் முதல் மையம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் திரு. பாபுல் சுப்ரியோ காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்று மையத்தைத் தொடங்கி வைத்தார்.
பிப்ரவரி 02 - World Wetlands Day
கருப்பொருள் - 'Wetlands and Water'
புற ஊதாக் கதிர்கள் மூலம் ரயில் பெட்டிகளைக் கிருமி நீக்கம் செய்த நாட்டின் முதலாவது மெட்ரோ என்றப் பெருமையை லக்னோ மெட்ரோ பெற்றுள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக இடி மின்னலை ஆராய்ச்சி செய்யும் நிலையம் ஒடிசா மாநிலம் பாலாசோரில் அமையவுள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக "Digital University" யை கேரள மாநில மங்களாபுரத்தில் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் தொடங்கி வைத்தார்.
University Name : Kerala University of Digital Sciences, Innovation and Technology.
இ - கேபினட் முறையை அமல்படுத்திய நாட்டின் முதல் மாநிலமானது இமாச்சலப் பிரதேசம்.
100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு பெற்ற முதல் மாநிலமாக கோவா உள்ளது. இதற்கு அடுத்ததாக தெலுங்கானா உள்ளது.
நாட்டில் மிகவும் இளம் வயதில் விமானி ஆன பெண் என்ற பெருமையை காஷ்மீரைச் சேர்ந்த ஆயிஷா அஜீஸ் (25 வயது) பெற்றுள்ளார்.
சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த ஷப்னம் என்ற பெண் தூக்கிலிடப்படவுள்ளார்.
“Tree City of the World 2020” என்ற அங்கீகாரத்தைப் பெற்ற நாட்டின் முதலாவது நகரம் எனும் பெருமையை ஹைதராபாத் நகரம் பெற்றுள்ளது. இதனை Arbor Day Foundation and the Food and Agriculture Organization இணைந்து அறிவித்துள்ளன.
இமயமலையின் சிவாலிக் வரம்பில் காணப்படும் 210 வகையான மரங்களை பாதுகாக்க இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் மாவட்டத்தில் ‘சிவாலிக் ஆர்போரேட்டம்’ (‘Shivalik Arboretum’) என்ற பெயரில் முதன்முதலில் தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்கள் மற்றும் மின் அடுப்புகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் “Go Electric” என்ற பிரச்சாரத்தை மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தொடங்கி வைத்தார்.
இதைப் போன்று, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்காக "Switch Delhi" என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
2040ம் ஆண்டில் உலகில் மூன்றாவது மிகப்பெரிய மின் நுகர்வோராக இந்திய உருவெடுக்கும் என சர்வதேச ஆற்றல் முகமை தெரிவித்துள்ளது.
2030ம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து விற்பதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டுக்கான இந்தி வார்த்தையாக பிரதமர் மோடி பயன்படுத்திய 'Aatma Nirbhar Bharat' என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு நிறுவனம் தேர்வு செய்துள்ளது.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நகரங்களில் உள்ள குடிநீர், கழிவுநீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகளின் நிலை குறித்த தகவல்களை சேகரிக்க Pilot Pey Jal Survekshan – யை முதல் கட்டமாக 10 நகரங்களில் வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகார அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) கோப்ரா கமாண்டோ படைப்பிரிவில் முதல் முறையாக பெண் கமாண்டோக்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய விமான கண்காட்சியான ஏரோ இந்தியா 2021 விமான கண்காட்சி பெங்களூரில் உள்ள எலஹங்கா விமானப்படைத் தளத்தில் நடைபெற்றது.
இந்தியாவில் 13வது முறையாக நடத்தப்படும் இந்த கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
இந்த சர்வதேச விமான கண்காட்சியானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியா ராணுவத்துறை சார்பில் பெங்களூரில் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தற்போது 22 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இவைகளுடன் மேலும் புதிதாக 12 அணு உலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளாக அணுசக்தித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.
08-வது இந்திய சர்வதேச பட்டு கண்காட்சியை மத்திய பெண்கள் (ம) குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி சுபின் இராணி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
மல்பெரி, எரி, டாசர் மற்றும் முகா ஆகிய நான்கு முக்கிய வகை பட்டுக்களை உற்பத்தி செய்யும் ஒரே நாடு இந்தியா மட்டுமே.
17வது சர்வதேச மெகா வர்த்தக கண்காட்சி ஓடிஸா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்றது.
11வது உலக பெட்ரோலியம் நிலக்கரி மாநாடு 2021 மற்றும் 2வது உலக எதிர்கால எரிசக்தி கூடுகையானது புதுதில்லியில் நடைபெற்றது.
உலக நீடித்த வளர்ச்சி உச்சி மாநாடு காணொளி வாயிலாக நடைபெற்றது.
Theme : Redefining our common future: Safe and secure environment for all.
ASEAN India Hackathon 2021 - யை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தொடங்கி வைத்தார்.
உலகிலேயே முதல் முறையாக "Carbon - Neutral Oil" - யை இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அமெரிக்காவிடம் இருந்து வாங்கியுள்ளது.
இதன் மூலம் 2035ஆம் ஆண்டுக்குள் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜீரோ கார்பன் நிறுவனமாக மாற நிர்ணயம் செய்துள்ள இலக்கை வெற்றிகரமாக அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

0 Comments