சர்வதேச நிகழ்வுகள்
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
எகிப்து நாட்டிற்கான புதிய இந்திய தூதராக அஜித் விநாயக் குப்தே நியமிக்கப்பட்டுள்ளார்.
சிரியா நாட்டிற்கான புதிய இந்திய தூதராக மகேந்தர் சிங் கன்யால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தாலி நாட்டின் பிரதமர் பதவியை கிசுப்பே கோன்டே ராஜினாமா செய்ததையடுத்து அந்நாட்டின் புதிய பிரதமராக மரியோ டிராகி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலகின் முதல் எரிசக்தி தீவை உருவாக்கும் திட்டத்திற்கு டென்மார்க் நாடு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இத்தீவானது வடகடல் பகுதியில் அமைக்கப்படவுள்ளது.
உலகின் மிகப்பெரிய கடலோர காற்றாலை பண்ணையானது தென்கொரியாவில் அமைக்கப்படவுள்ளது.
உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவை குஜராத்தில் அமைக்க ரிலையன்ஸ் குழுமம் திட்டமிட்டுள்ளது.
உலகிலேயே முதல் முறையாக அண்டார்டிகா ஜார்ஜியா கடல் பகுதியில் மஞ்சள் நிறத்திலான பென்குவின் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி மருந்தை வளரும் நாடுகளுக்கு விநியோகிக்கும் கோவாக்ஸ் அமைப்பின் மூலம் தடுப்பூசிகளைப் பெற்ற முதல் நாடாக கானா இடம் பிடித்துள்ளது.
பிரிட்டனின் BBC தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தங்கள் நாட்டில் ஒளிபரப்ப சீனா தடை விதித்துள்ளது.
சீனாவில் அரசுக்கு சொந்தமான சீனோவாக் பயோடெக் தயாரித்துள்ள சீனோஃபார்ம் தடுப்பூசியைத் தொடர்ந்து அந்நாட்டின் இரண்டாவது உள்நாட்டு தயாரிப்பான கொரோனாவாக் தடுப்பூசியை பொதுமக்களுக்கு பயன்படுத்த மற்றும் நிபந்தனைகளுடன் சந்தைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சீனா 2030க்குள் வறுமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என ஐ.நா நிர்ணயித்த காலக்கெடுவுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வறுமையை ஒழித்து விட்டதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சீனாவில் ஐக்கிய நாடுகளவையின் ஒருங்கிணைப்பாளராக இந்தியாவை சேர்ந்த சித்தார்த் சட்டர்ஜி பொறுப்பேற்றுள்ளார்.
இந்துப்புக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் சுமார் 17,300 ஆண்டுகளுக்கு முந்தைய கங்காரு பாறை ஓவியம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
சுமார் 6.5 அடி நீளம் உள்ள இந்த ஓவியம் சிவப்பு நிறமியைக் கொண்டு பயன்படுத்தி வரையப்பட்டுள்ளது.
5000 ஆண்டுகள் பழமையான மதுபான ஆலையானது எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆலையானது மன்னர் நார்மர் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
சவூதி அரேபியாவானது முதல் முறையாக பெண்களுக்கான ஆயுதப்படையை உருவாக்கியுள்ளது.
தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் கார்டூன் பெண் கதாபாத்திரங்களும் கட்டாயமாக 'ஹிஜாப்' அணிய வேண்டும் என ஈரான் அரசு உத்தரவிட்டுள்ளது.
அட்லாண்டிக் கடலை தனி ஒருவராக கடந்து, மிக குறைந்த வயதில் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்த பெண் என்ற சாதனையை இங்கிலாந்தைச் சேர்ந்த ஜாஸ்மின் ஹாரிசன் படைத்துள்ளார்.
இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து மேற்கொள்ளும் 16வது கூட்டு இராணுவப் பயிற்சி யூத் அபியாஸ் ராஜஸ்தானில் நடைபெற்றது.
‘PASSEX’ எனப்படும் Passage Exercise கூட்டு கடற்படை ஒத்திகையானது இந்தியா மற்றும் இந்தோனேசியா கடற்படைகளுக்கிடையே நடைபெற்றது.
‘NAVDEX 21’ மற்றும் IDEX 21 என்ற பெயரில் ஐக்கிய அரபு அமீரத்தின் அபுதாபி நகரில் நடைபெறும் சர்வதேச கடற்படை மற்றும் ராணுவ கண்காட்சியில் பங்கு பெறுவதற்காக இந்தியாவானது உள்நாட்டில் தயாரான INS பிரளயா எனும் போர்க்கப்பலை அனுப்பி வைத்துள்ளது.
இந்தியா - மாலத்தீவு இடையே கடல்சார் பாதுகாப்பிற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக 50 மில்லியன் டாலர் மதிப்பிலான (362 கோடி) ராணுவ கடன் ஒப்பந்தத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மாலத்தீவு ராணுவ மந்திரி மரியதிதி இருவரும் கையெழுத்திட்டனர்.
காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவை குறைப்பதுடன் 2050ம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய மாசுபாடு என்ற அளவை எட்ட வேண்டும் என்றும் அதற்கு கரியமில வாயுவை காற்றில் அதிகமாக கலக்கும் இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சிறப்பு தூதர் ஜான் கெர்ரி வலியுறுத்தியுள்ளார்.

0 Comments