குழுக்கள்
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண 4 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைந்துள்ளது.
பூபேந்தர் சிங்மேன் - பாரதீய கிஸான் யூனியன் தேசிய தலைவர்
பிரமோத் குமார் ஜோஷி - சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி மைய தெற்காசிய இயக்குநர்
அசோக் குலாடி - வேளாண் விளைபொருள்களுக்கான விலை நிர்ணய ஆணைய முன்னாள் தலைவர்
அனில் கன்வட் - ஷேத்கரி சங் கடனா என்ற விவசாயிகள் சங்க தலைவர்.
உச்ச நீதிமன்றம் அமைத்த இந்த குழுவிலிருந்து பூபேந்திர சிங்மேன் வெளியேறினார்.
கோவிட் -19 தடுப்பூசி நிர்வாகத்திற்கான அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் தலைவராக முன்னாள் TRAI தலைவர் R.S.ஷர்மாவை மத்திய அரசு நியமித்துள்ளது.
பறவை காய்ச்சல் (HIN5) குறித்து ஆராய மத்திய செயலாளர் பிரீத்தி பந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு-5ன் கண்டுபிடிப்புகளை ஆராய இணைச் செயலாளர் ப்ரீத்தி பந்த் தலைமையில் மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் தொழில்நுட்பக் குழுவை சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் அமைத்துள்ளது.
ஆன்லைன் கடன் வழங்கல் தொடர்பான துன்புறுத்தல் சம்பவங்கள் அதிரித்தனால் டிஜிட்டல் கடன் வழங்க ஒழுங்கு முறைகளை பரிந்துரைக்க ரிசர்வ் வங்கி நிர்வாக இயக்குனர் ஜெயந்த்குமார் தாஸ் தலைமையிலான பணிக்குழுவை (Jayant Kumar Dash Working Group) இந்திய ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.

0 Comments