ஐ.நா.நிகழ்வுகள்
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகளின் எண்ணிக்கை – 15. இதில் 5 நிரந்தர உறுப்பினர்கள் (அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ்)
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமில்லாத நாடுகளின் பதவிகாலம் இரண்டு ஆண்டுகள். இந்திய இந்த கவுன்சிலில் 8 – வது முறையாக உறுப்பினராக இணைந்துள்ளது. இந்தியாவிற்கு ஆதரவாக 184 நாடுகள் வாக்களித்துள்ளன.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை வரும் ஆகஸ்ட் 2021 – ல் இந்தியா ஏற்கவுள்ளது.
ஐ.நா பாதுகாப்பு குழுவில் உள்ள 3 துணை அமைப்புகளான தலிபான் தடை, தீவிரவாத எதிர்ப்பு, லிபியா தடை போன்றவற்றிற்கு இந்தியா தலைமை தாங்கியுள்ளதாக ஐ.நாவின் நிரந்தர பிரதிநிதியான திருமூர்த்தி கூறியுள்ளார்.
ஐ.நா அமைப்பின் உயர்நிலை சமூக, பொருளாதார ஆலோசனைக் குழுவில் இந்திய பொருளாதார நிபுணரான ஜெயதி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக #orangetheworld என்ற அமைப்பின் பிரதிநிதியாக உலக அழகி பட்டம் வென்ற, இந்தியாவைச் சேர்ந்த நடிகை மனுஷி ஷில்லார் நியமிக்கப்பட்டுள்ளார்.
நவம்பர் 25 – சர்வதேச பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினம்.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவராக பிஜியின் தூதரான நஷாத் ஷமீம் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.நா வின் தேசிய பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்பு படையும் விரைவில் இணையவுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படையின் இயக்குனர் S.N.பிரதான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்பு படை தொடங்கப்பட்ட ஆண்டு - 2006
உலகில் முதல் முறையாக ஐ.நாவின் அணு ஆயுத தடை சட்டம் 22/01/2021 அன்று அமலுக்கு வந்தது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு : 2017
அணு ஆயுத தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த நாடுகளின் எண்ணிக்கை : 61.

0 Comments