தமிழக நிகழ்வுகள்
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், முதல் தடுப்பூசியை தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் செந்தில் போட்டுக் கொண்டார்.
TNBS நடத்திய ஆறு ஆண்டு ஆய்வின்படி, வண்ணத்துப்பூச்சிகள் அதிகம் நிறைந்த பகுதியாக (Super Hotspot) கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி மலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
TNBS - The Nature and Butterfly Society
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் சுமார் 46மீட்டர் உயரத்திற்கு அமைக்க விமான நிலைய ஆணையம் அனுமதியளித்துள்ளது.
சென்னை நகரத்தின் முதல் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள கீழ்ப்பாக்கத்தில் விரைவில் ஒரு நீர் அருங்காட்சியகம் அமையவுள்ளது.
ஸ்வீடிஷ் - அமெரிக்க உற்பத்தி நிறுவனமான Autoliv Inc நிறுவனம் ரூ.100 கோடி முதலீட்டில் தனது வாகன பயணிகளின் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் நிறுவ திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஆலையானது திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொழிற்பூங்காவில் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இண்டியன் ஆயில் நாகப்பட்டினத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்கவுள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி பாலத்துக்கு லூர்தம்மாள் சைமன் பாலம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா வெளியிட்டார்.
தமிழக அரசின் பொதுத்துறை நூலகத்தின் சார்பில் தமிழகத்திலேயே முதல் முறையாக சமுதாய நூலகமானது திருச்சியில் திறந்துவைக்கப்பட்டது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் அமைக்கப்படுகின்ற நூலகங்கள் சமுதாய நூலகங்கள் என்றழைக்கப்படுகின்றன.
தொல்லியல் கள ஆய்வுக்கான நிதி ஒதுக்கீடானது 2 கோடியிலிருந்து 3 கோடியாக உயர்த்தி தமிழக அரசானது அரசாணையை வெளியிட்டுள்ளது.
உத்திரமேரூரில் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால கொற்றவை சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே கி.பி.10, 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வை என்ற மூத்த தேவியின் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தவ்வையின் பிள்ளைகளான மாந்தன் என்ற கோமுகன் மற்றும் மாந்தி ஆகியோருடன் பீடம் ஒன்றில் சுகாசனம் அமர்வில் அமர்ந்த நிலையில் புடைப்புச் சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது.
செங்கம் அருகே வாய்விடாந்தாங்கல் கிராமத்தில் விஜயநகர ஆட்சிக் காலத்தில் நீர் மேலாண்மை குறித்த பொது ஆண்டு 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுகள் புதிதாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரம் அருகேயுள்ள மூளிப்பட்டியில் கி.பி.16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரைவீரன், போர்வீரன் உருவங்கள் செதுக்கப்பட்ட நடுக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
2020 – 2021 ஆண்டிற்கான நிதியாண்டில் தமிழகத்தில் 7 இடங்களில் அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவை:
ஈரோடு – கொடுமணல்.
அரியலூர் – கங்கைகொண்ட சோழபுரம், மாளிகைமேடு.
கிருஷ்ணகிரி – மயிலாடும் பாறை.
சிவகங்கை – கீழடி (சுற்றியுள்ள மணலூர், அகரம், கொந்தகை).
தூத்துக்குடி – ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை.
இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்ள ஏதுவாக கல்லூரி மாணவர்களுக்கு எல்காட் நிறுவனத்தின் மூலமாக, ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தைப்பூசத்திற்கு விடுமுறையை அறிவித்து, தமிழக அரசு அரசாணை வெளியீடுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பொது விடுமுறைகளின் எண்ணிக்கையானது 22-லிருந்து 23- ஆக உயர்ந்துள்ளது.
அம்மா அழைப்பு மைய எண்ணான “1100” முதல்வரின் குறைதீர் மேலாண்மைத் திட்டதிற்கு பயன்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையத்தின் முதல் கூட்டமானது நீதிபதி குலசேகரன் தலைமையில் நடந்தது.
தமிழக தேர்தல் ஆணையம் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அது தொடர்பான குறிப்புகள் பின்வருமாறு:
தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை – 6,26,74,442
தமிழகத்தில் உள்ள ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை – 3,08,38,472
தமிழகத்தில் உள்ள பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை – 3,18,28,727
தமிழகத்தில் உள்ள 3-ம் பாலின வாக்காளர்கள் எண்ணிக்கை – 7,246
தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி – சோழிங்கநல்லூர்,செங்கல்பட்டு
தமிழகத்தில் குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதி – துறைமுகம், சென்னை
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் – சுனில் அரோரா (23வது)
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி – சத்ய பிரதா சாஹு.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பாக, “தீ” என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு மத்திய மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் அடிக்கல் நாட்டினார்.
திருச்சி மாநகரில் குற்றங்களை தடுக்கவும், சட்டவிரோத செயல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் ‘பகுதி ரோந்து விழிப்புணர்வு காவல் அலுவலர்கள்' எனும் திட்டம் திருச்சி மாநகர காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்கம் மற்றும் பாரதிய ஜெயின் சங்கம் சார்பில் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா (ஜன 24) மற்றும் ‘ஸ்மார்ட் கேர்ள்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் 12 முதல் 18 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு இரு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை மாவட்ட பொள்ளாச்சி–வால்பாறை சாலையில், ஆழியாறு வனப் பகுதியில் அமைந்துள்ள குரங்கு அருவியின் பெயரானது "கவியருவி" பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கவி என்ற சொல்லுக்கு குரங்கு என்ற பொருளும் உண்டு.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி. குன்னத்தூரில் தமிழக வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில், ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக, சுமார் 12 ஏக்கரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவாக கோவில் கட்டப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த, குடியரசு தின விழாவில், தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில், ஆறு மாநில கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அவை
கர்நாடகாவின் டொல்லு குனிதா நடனம்,
தெலுங்கானாவின் லம்பாடி நடனம் மற்றும் குஸ்ஸாடி நடனம்,
கேரளாவின் திருவாதிரைக்களி நடனம்,
மத்திய பிரதேசத்தின் பதாயி நடனம்,
குஜராத்தின் ரத்வா நடனம்
சென்னையில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பு குறித்த தகவல்கள் பின்வருமாறு:
அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில், 16 அரசு துறைகள் சார்பில், 17 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
முதல் பரிசு - காவல் மற்றும் சுகாதாரத் துறைக்கு;
இரண்டாம் பரிசு - சுற்றுலா மற்றும் ஊரக வளர்ச்சித் துறைக்கு;
மூன்றாம் பரிசு - தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கு, அறிவிக்கப்பட்டது.

0 Comments