மாநில நிகழ்வுகள்
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
திருமணத்தின் மூலம் மதம் மாற்றும் லவ் ஜிகாத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் இயற்றியுள்ள சட்டங்கள் :
உத்தரகாண்ட் மாநிலமானது, "மத சுதந்திர சட்டம் - 2018" - யை அம்மாநில அரசு இயற்றியுள்ளது.
தண்டனை : 2 ஆண்டுகள்.
"இமாச்சல பிரதேச மத சுதந்திரச் சட்டம் - 2019" - யை அம்மாநில அரசு இயற்றியுள்ளது
தண்டனை : 7 ஆண்டுகள்
சட்டவிரோத மதமாற்ற அவசரச் சட்டம் 2020 - யை உத்திரப் பிரதேச மாநில அரசு இயற்றியுள்ளது
தண்டனை : 10 ஆண்டுகள்
அபராதம் : 50 ஆயிரம்
மத்திய பிரதேசத்தில் "மத சுதந்திர சட்டம் 2020" - யை அம்மாநில அரசு நிறைவேற்றியுள்ளது.
தண்டனை : 10 ஆண்டுகள்
அபராதம் : 1 இலட்சம்
இதுபோன்றதொரு சட்டத்தை கர்நாடகா மாநிலம் விரைவில் இயற்றயுள்ளது.
உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆலை மத்திய பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது.
இடம் : ஓம்கரேஷ்வர் அணை
உற்பத்தி திறன் : 600 MW
உற்பத்தி தொடங்கும் ஆண்டு : 2022 - 2023
குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் இருந்து வெளியே வந்து 18 வயது பூர்த்தியடைந்த சிறுவர் சிறுமிகளுக்காக "Launch Pad" திட்டத்தை மத்திய பிரதேசம் அறிமுகம் செய்துள்ளது.
ஜனவரி 06 பத்திரிகை தினமாக அனுசரிக்கப்படவுள்ளதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
முதல் மராத்தி மொழி பத்திரிக்கையான "தர்பன்" வெளிவந்த தினம் ஜனவரி 06, 1832. மேலும் "மராத்தி பத்திரிகையின் தந்தை" என்றழைக்கப்படும் பால்ஷஸ்திரி ஜம்பேகர் அவர்களின் பிறந்த தினமும் ஜனவரி 06 என்பதால் அன்று பத்திரிகை தினமாக அனுசரிப்பதாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலமானது மண், நீர் ஆகியவற்றை பரிசோதிக்க தேசிய கிருஷி விகாஸ் யோஜனாவின் கீழ், 40 கிருஷி சஞ்சீவினி வேன்களை அம்மாநில முதல்வர் எடியூரப்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் mPension என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி பேட் வழங்கும் திட்டத்தினை பஞ்சாப் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநில முதல்வர் – அமரீந்தர சிங்.
சில கூடுதல் தகவல்கள்.
நாட்டிலுள்ள அனைத்துப் பெண்களுக்கும் சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் உலகின் முதல் நாடு – ஸ்காட்லாந்து.
6 முதல் 12 வரையிலான அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கும் குஷி திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம் – ஓடிஸா. பெண்கள் மத்தியில் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்தவும் அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் உஜ்வாலா சானிட்டரி நாப்கின் திட்டத்தின் ஒரு பகுதியாக சானிட்டரி பேட் உற்பத்தி பிரிவுகளை கடந்த 2018 ஆண்டு ஓடிஸா மாநிலமானது அறிமுகப்படுத்தியது.
சுவிதா என்ற பெயரில் மத்திய அரசின் ஜன் ஆஷாதி கடைகள் மூலம் ஒரு ரூபாய்க்கு சானிட்டரி பேட் வழங்கும் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 2019, அன்று மத்திய அரசு அறிவித்தது.
சானிட்டரி நாப்கின்களை வழங்கும் இயந்திரத்தை நிறுவிய நாட்டின் முதல் ரயில் – ராஜ்தானி எக்ஸ்பிரஸ்
சானிட்டரி நாப்கின்களை வழங்கும் இயந்திரத்தை நிறுவிய நாட்டின் முதல் ரயில் நிலையம் – போபால் ரயில் நிலையம், ம.பி (ரூ.5/-)
மேற்கு வங்காளமானது நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக 105 மில்லியன் அமெரிக்க டாலர் திட்டத்தை செயல்படுத்த உலக வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
வரும் ஜனவரி 26 முதல், 10000 அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை "பசுமை வளாகங்களாக" கேரள மாநில அரசானது அறிவிக்கவுள்ளது.
விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க உத்திரப்பிரதேச அரசானது Kissan Kalyan Yojana என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஊழல் குறித்த புகார்களை தெரிவிப்பதற்காக ‘Satark Nagrik’ என்ற மொபைல் செயலியை ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநரான மனோஜ் சின்ஹா வெளியிட்டுள்ளார்.
உலகின் மிக நீண்ட ரயில்வே பிளாட்பாரம் என்ற பெருமையை கர்நாடகாவின் ஹிப்பாளி ரயில் நிலையம் பெற்றுள்ளது.
அருந்ததி மற்றும் மைத்ரேயி என்ற இரண்டு திட்டங்களின் கீழ் பிராமணப் பெண்களின் திருமணத்தின் போது நிதியுதவி வழங்குவதற்கு கர்நாடக மாநிலமானது ஒப்புதல் அளித்துள்ளது.
அருந்ததி : பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிராமணப் பெண்களுக்கு ரூ.25,000/-
மைத்ரேயி : பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3,00,000/-.
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தின் 1,600 டன் லித்தியம் வளங்கள் இருப்பதை அணு தாதுக்கள் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் (ஏஎம்டி) கண்டறிந்துள்ளது.
லடாக்கில் புதிய வானிலை ஆய்வு மையத்தை மத்திய புவி அறிவியல் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் திறந்து வைத்தார். லடாக்கின் முதல் வானிலை மையம் இதுவாகும்.
மேலும் இது 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மிக உயர்ந்த வானிலை ஆய்வு மையமாகும்.
அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி நகரில், ‘Bhraman Sarathi’ திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இலவசமாக பயணிப்பதற்காக “Pink Bus” சேவையை அம்மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் தொடங்கி வைத்தார்.
மத்திய நிதியமைச்சகத்தின், செலவினத்துறை உருவாக்கிய, ‘எளிதில் தொழில் செய்வதற்கான சீர்திருத்தத்தை’ (Ease of Doing Business) மேற்கொள்ளும் 8வது மாநிலமாக கேரளா உருவாகியுள்ளது.
இந்த சீர்திருத்தத்தை நிறைவு செய்த ஆந்திரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய ஏழு மாநிலங்களில் கேரளா இப்போது இணைந்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சீர்திருத்தங்களை நான்காவது மாநிலமாக மணிப்பூர் அமல்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்தச் சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ள ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தெலங்கானா.
பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அவர்கள் அம்மாநிலத்தின் முதல் பறவை திருவிழாவான “கல்ராவ்” (Kalrav) திருவிழாவினை ஜமுய் மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நாகி-நக்தி பறவைகள் சரணாலயத்தில் தொடங்கி வைத்தார்.
‘One school, One IAS’ என்ற திட்டத்தை கேரள மாநில ஆளுநரான ஆரிப் முகம்மது கான் தொடங்கி வைத்தார்.
பிரபல எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா தனது முதல் இந்திய நிறுவனத்தை பெங்களூரில் அமைக்கவுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் உள்ள இந்தியாவின் விலையுயர்ந்த Guchchi காளானுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தின் Tepesia நகரில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அடிமட்டத்தில் பிரபலப்படுத்துவதற்காக Science City அமைப்பதற்கு அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் அடிக்கல் நாட்டினார்.
இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் அம்மாநிலத்தின் முதல் ஆன்லைன் இளைஞர் வானொலி நிலையமான "Radio Hills-Youngistan Ka Dil" யை தொடங்கி வைத்தார்.
கர்நாடக மாநிலத்தின் செலவீனங்களை வெளிப்படையாக தெரிந்து கொள்வதற்காக Avolokana software எனப்படும் மின்னாளுமை கருவியை அம்மாநில முதல்வர் எடியூரப்பா தொடங்கி வைத்தார்.
1,800 திட்டங்களை செயல்படுத்த 39 துறைகள் செய்த பொருளாதாரத் தடைகள் மற்றும் செலவினங்களைக் கண்காணிக்க மாநில அரசுக்கு உதவும்.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் டிராகன் பழத்தின் பெயரை 'கமலம்' என்று பெயர் மாற்றம் செய்து குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் வீடு வீடாகச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.
உத்தரகண்ட் மாநிலத்தின் முதல் குழந்தை நட்பு காவல் நிலையத்தை (Child - Friendly Police Station) Dalanwala police station - ல் அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் திறந்து வைத்தார்.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
தோட்டக்கலை மற்றும் மருத்துவ வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக மாற்றுவதற்காக “Mukhyaantri Bagayat Vikas Mission” திட்டத்தை குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி அறிவித்துள்ளார்.
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பஞ்சாப் மாநில அரசானது, ஜனவரி 2021 ஐ "பெண் குழந்தையின் மாதம்" என்று அறிவித்துள்ளது. Dheeiyan Di Lohri திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் "PANKH Abhiyan" திட்டத்தை தொடங்கி வைத்தார்.
P - Protection
A - Awareness of their rights
N - Nutrition
K - Knowledge
H - Health
பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ திட்டத்தின் கீழ் "Aware girl child, Able Madhya Pradesh" என்ற கருப்பொருளுடன் மத்தியப் பிரதேசம் தேசிய பெண் குழந்தை தினத்தை கொண்டாடவுள்ளது. ஜனவரி 24 முதல் 30 வரை, தேசிய பெண் குழந்தை வாரத்தையும் அரசு கடைபிடிக்கும்.
தேசிய பெண் குழந்தை தினத்தன்று குழந்தை திருமணத்தைத் தணிக்கும் நோக்கில் பணியாற்றிய தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை ஒடிசா அரசு கவுரவிக்கும் என்று அறிவித்துள்ளது.
தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24யை முன்னிட்டு, உத்தரகண்ட் மாநில ஒருநாள் முதல்வராக ஹரித்துவாரைச் சேர்ந்த கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி பணியாற்றினார்.
முன்னதாக, சர்வதேச பெண் குழந்தைகள் தினமான அக்டோபர் 11யை முன்னிட்டு பின்லாந்து நாட்டின் ஒருநாள் பிரதமராக ஆவா முர்டோ என்பவர் பதவி வகித்தார்.
அதே நாளில் இந்தியாவிற்கான ஒருநாள் பிரிட்டன் தூதராக டெல்லியைச் சேர்ந்த சைதன்யா வெங்கடேஷ்வரன் நியமிக்கப்பட்டார்.
ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு பீகார் மாநிலத்தின் ஒருநாள் போலீஸ் இன்ஸ்பெக்டராக 13 வயது சிறுமியான அஞ்சலி குமாரி பணியாற்றினார்
இமாச்சல பிரதேச மாநிலமானது தொலைத்தொடர்பு துறையை மேம்படுத்த Power Grid Corporation of India Ltd உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
அவசர காலங்களில், போர் விமானங்கள் தரையிறங்க மற்றும் எடுத்துச் செல்ல விரைவு நெடுஞ்சாலையில் 2 விமான ஓடுபாதைகளைக் (2 Airstrips on Expressways) கொண்ட நாட்டின் முதல் மாநிலம் உத்திரப் பிரதேசம்.
ஜனவரி 24 ஆம் தேதி 71 வது உத்திரப் பிரதேச மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு ‘Udyam Sarathi App’ ஒன்றை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிமுகப்படுத்தியுள்ளார்.
One District One Product (ODOP) திட்டத்தின் கீழ் இது தொடங்கப்பட்டுள்ளது.
Theme : ‘Respect for self-reliant Uttar Pradesh, women young farmers, development of all’.
ஜனவரி 25 அன்று ஹிமாச்சல பிரதேசம் உருவான 50வது (பொன் விழா) ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது
25 ஜனவரி 1971ல் இமாச்சலப் பிரதேசம் இந்தியாவின் 18வது மாநிலமாக உருவானது.
தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு மஹாராஷ்டிராவில், சிறைகளின் பழமை மற்றும் வரலாற்று சம்பவங்கள் குறித்து மாணவர்கள் அறிவதற்காக, சிறை சுற்றுலா திட்டத்தை அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்.
பூனா ஒப்பந்தம் என்பது 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 அன்று பூனாவில் உள்ள எரவாடா சிறையில் அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே ஏற்பட்ட ஓர் உடன்படிக்கை ஆகும்.
உத்தரகண்ட் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக, அம்மாநில அரசானது 100 Days in Heaven என்ற ரியாலிட்டி ஷோ நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தொகுப்பு வழங்கவுள்ளார்.
6 முதல் 12 வரையிலான பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கும் ‘Kishori Suchita Abhiyan’ திட்டத்தை திரிபுரா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிமுகம் செய்துள்ள மாநிலங்கள் குறித்த தகவல்கள் பின்வருமாறு:
உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி பேட் வழங்கும் திட்டத்தினை பஞ்சாப் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநில முதல்வர் – அமரீந்தர சிங்.
6 முதல் 12 வரையிலான அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கும் குஷி திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம் – ஓடிஸா. பெண்கள் மத்தியில் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்தவும் அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் உஜ்வாலா சானிட்டரி நாப்கின் திட்டத்தின் ஒரு பகுதியாக சானிட்டரி பேட் உற்பத்தி பிரிவுகளை கடந்த 2018 ஆண்டு ஓடிஸா மாநிலமானது அறிமுகப்படுத்தியது.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் மசூதிக்கு சென்னப் பட்டினத்தின் நவாப் முகம்மது அலி கானின் மகன் மவுல்வி அஹமதுல்லா ஷா பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் 1857-ம் ஆண்டு, ஆங்கிலேய அரசுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய் கலகத்தில் பங்கு பெற்றார். மேலும், அவாத் பிராந்தியத்தில் சிப்பாய் கலகத்தின் கலங்கரை விளக்கம் என்றும் அழைக்கப்பட்டார்.
புதிய M-Sand கொள்கையை ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநிலமானது தனது முதல் "ஓநாய் சரணாலயத்தை" கொப்பல் மாவட்டத்தில் உள்ள பங்கப்பூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய சாம்பல் நிற ஓநாய் மித வறண்ட மற்றும் வறட்சியான பகுதிகளில் வாழக்கூடியது.

0 Comments