இந்திய நிகழ்வுகள்
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே முதல் முறையாக மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மூன்றாம் பாலினத்தவருக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் ‘Fire Park’ ஓடிஸா மாநிலம் புவனேஸ்வரில் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தொடங்கி வைத்தார். மேலும் தீயணைப்பு சேவைகளுக்காக ‘AgnishamaSeva’ என்ற போர்டலையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
இந்தியாவின் முதல் தொழிலாளர் இயக்கங்கள் பற்றிய அருங்காட்சியகமானது கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவில் அமையவுள்ளது.
இந்தியாவின் முதல் ‘Migrant Workers Cell’ பிரிவை குஜராத்தில் உள்ள சூரத்தில் மத்தியப் பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
இந்தியாவின் முதல் Solar Electric RORO சேவை மற்றும் கேரளாவின் முதல் Amphibious Water Bus ஆகியவை 2021-2022 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும், என அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதல் முறையாக 9mm Machine Pistal ASMI - யை இந்திய ராணுவம் DRDO வுடன் இணைந்து Make in India திட்டத்தின் கீழ் உருவாக்கியுள்ளது.
ASMI என்பதன் பொருள் : “Pride”, “Self-Respect” and “Hard Work”
இந்தியாவின் முதல் பனிச்சறுக்கு பூங்கா (Indoor Ski Park) ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள குப்ரி நகரில் அமையவுள்ளது.
இந்தியாவின் முதல் பனிக்குடில் கஃபே (Igloo Café) காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களை கவரும் வகையில் Kolahol Green Group of Hotels and Resorts இதனை அமைத்துள்ளது
இது ஆசியாவிலேயே மிகப்பெரிய "பனி குடில் உணவகம்" என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்தியாவின் முதல் "Air Taxi" சேவையானது சண்டிகர் விமான நிலையத்திலிருந்து ஹரியானா மாநில ஹிசாருக்கு தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் இச்சேவையை ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் தொடங்கி வைத்தார்.
இதில் விமானி தவிர மூன்று பேர் பயணம் செய்யலாம்.
UDAN திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு : 2017
இந்தியாவில் முதன்முறையாக மொபைல் செயலி மூலமாக வயதானவர்களை கண்டறிந்து DBT முறையில் நேரடியாக வங்கி கணக்கில் பென்சன் தொகையை அனுப்பும் வகையில் கர்நாடக மாநில அரசு “Navodaya” எனும் மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக Direct Benefit Transfer மூலம் மின்சார மானியம் வழங்கிய முதல் மாநிலம் என்றப் பெருமையை மத்திய பிரதேசம் பெற்றுள்ளது.
இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்காக நாட்டின் முதலாவது "படகு நூலகம்" மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக 'அலங்கார மீன்வளர்ப்பு முனையம்' தமிழகத்தில் அமையவுள்ளதாக மத்திய மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை (100 அடி) புத்தகயாவில் அமையவுள்ளது.
இந்தியாவின் மிக நீளமான சாலை வளைவு பாலமானது மேகாலயாவில் அமைந்துள்ளது. இதனை அம்மாநில முதல்வர் கான்ராட் கே சங்மா திறந்து வைத்தார்.
பாலத்தின் பெயர் : Wahrew Bridge.
அமைந்துள்ள இடம் : Sohbar, East Khasi Hills district.
இந்திய ரயில்வேயானது முதல் முறையாக 5 சரக்கு ரயில்களை இணைத்து சுமார் 3.5 கி.மீ நீளமுள்ள சரக்கு ரயிலை இயக்கி சாதனை படைத்துள்ளது.
ரயிலின் பெயர் : வாசுகி
ரயில்வே மண்டலம் : தென்கிழக்கு மத்திய இரயில்வே
இயக்கப்பட்ட தூரம் : 224 கி.மீ
கடக்க எடுத்துக் கொண்ட நேரம் : 7 மணி நேரம்.
மின்சாரத்தால் இயங்கும் 1.5 கி.மீ நீள உலகின் முதல் இரட்டை அடுக்கு பெட்டக மின்சார ரயிலை (புதிய அட்டலி - புதிய கிஷன்கர்க்) பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரான (BEML) நாட்டின் முதல் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மும்பையில் அறிமுகம் செய்துவைத்தார்.
BEML - Bharat Earth Movers Limited, Bangalore.
முன்னதாக, நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை தில்லியில் பிரதமர் மோடி கடந்த டிசம்பர் 2020ல் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் புதிதாக இரண்டு அரியவகை எறும்பினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை:
Ooceraea Joshii - அமிதாப் ஜோஷி நினைவாக பெயரிடப்பட்டுள்ள இந்த எறும்பினமானது கேரளா பெரியார் புலிகள் சரணாலயத்தில் கண்டறிப்பட்டது.
Ooceraea decamera - தமிழ்நாட்டில் மதுரை அருகேயுள்ள அழகர்கோவில் அருகே கண்டறியப்பட்டுள்ளது. (Decamera - பத்து உணர்வு கொம்பு)
ஓய்வுபெற்ற நாளிலேயே ஓய்வூதிய ஆணை வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசானது அறிவித்துள்ளது. பிரயாஸ் எனும் இத்திட்டத்தின் கீழ் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம் 1995-ல் உறுப்பினர்களாக உள்ள ஊழியர்களுக்கு ஓய்வு பெரும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்கப்படும்.
ஒரு நாடு மற்றொரு நாட்டின் அணுசக்தி நிலையங்களை தாக்கக் கூடாது என்பதற்கான ஒப்பந்தமானது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த 1988, டிசம்பர் 31 அன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி அணுசக்தி நிலையங்கள் தொடர்பான விவரங்களை இந்தியா – பாகிஸ்தான் பரிமாறிக்கொள்ளும் நடைமுறையானது 1992, ஜனவரி 1 முதல் பின்பற்றப்படுகிறது.
GST வரி வசூலானது கடந்த டிசம்பர் 2020 - ல் புதிய உச்சமாக 1.15 லட்சம் கோடியை எட்டி வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. GST பற்றிய தகவல்கள் பின்வருமாறு:
நுகர்வோர் பண்டங்கள் (அ) பணிகளை வாங்கும் போது விதிக்கப்படும்
இது ஒரு மறைமுக வரி & “ஒரு முனை வரி”
GST முதலில் அறிமுகப்படுத்திய நாடு – பிரான்ஸ், 1954
1970 - 80 களில் பல ஐரோப்பிய நாடுகள் இதனை அமல்படுத்தியது.
GST லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது – மார்ச் 29, 2017
GST ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது – ஏப்ரல் 6, 2017
GST நடைமுறைக்கு வந்தது – ஜூன் 1, 2017
GST சட்ட திருத்த மசோதா – 122வது
GST சட்ட திருத்தம் – 101வது
GST அரசியலமைப்பு விதி – 279A
GST-யால் நீக்கப்பட்ட விதி – 268A
GST மூலம் மாற்றம் செய்யப்பட்ட அட்டவணைகள் – அட்டவணை 6 & 7
GST வரி சீர்திருத்தம் பற்றி பரிந்துரைத்த குழுவின் தலைமை – அசிம் தாஸ் குப்தா
குறிக்கோள் "ஒரு நாடு-ஒரு அங்காடி-ஒரு வரி"
GST வரி விகிதங்கள் - 5%, 12%, 18% மற்றும் 28%
GST அமல்படுத்திய முதல் மாநிலம் – அசாம் (2nd - பீகார்; 3rd – ஜார்கண்ட்)
GST அமல்படுத்திய 28-வது மாநிலம் – தமிழ்நாடு
GST- ன் தலைவர் – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கடந்த 2020 – ம் ஆண்டு இறந்த புலிகளின் எண்ணிக்கை 100. மாநிலங்கள் வாரியாக புலிகள் இறப்பு விபரம் பின்வருமாறு :
மத்தியப்பிரதேசம் – 26
மகாராஷ்டிரா - 15
கர்நாடகா - 11
கேரளா – 10
தமிழகம், உத்திரப்பிரதேசம் – 8
சுயசார்பு இலக்கை அடைவதற்கான பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த மூன்று மந்திரங்கள்:
நிர்வாக மேலாண்மையில் புதிய கண்டுபிடிப்புகள்
ஒருங்கிணைந்த முயற்சி மற்றும்
அனைவருக்குமான திட்டம்
தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாசாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் “டெல்லியில் தமிழ் அகாடமி” அமைக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் : அரவிந்த் கெஜ்ரிவால்
தமிழ் அகாடமியின் தலைவர் : மணீஷ் சிசோடியா | துணை தலைவர் : N. ராஜா
ஓடிஸா மாநிலம், சம்பல்பூரில் அமையவுள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்திற்கான (IIM) நிரந்திர வளாகம் அமைப்பதற்கான விழாவில் காணொளி வாயிலாக கலந்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
இந்தியாவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைத்து தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை பொது மக்களுக்கு அவசரகாலங்களில் செலுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் இணைத்து தயாரித்து, மகாராஸ்டிரா புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் பரிசோதனை செய்து, உற்பத்தி செய்து வரும் கோவிட்ஷீல்டு தடுப்பூசியை பொது மக்களுக்கு அவசரகாலங்களில் செலுத்த மத்திய அரசின் நிபுணர் குழு அனுமதி அளித்துள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன் வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும் Missed Call (8454955555) மூலம் சமையல் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த அழைப்பிற்கு கட்டணம் ஏதும் கிடையாது. ஓடிஸா மாநிலம், புவனேஷ்வரில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதனைத் தொடக்கி வைத்தார்.
பணியின்போது உடல் ஊனம் ஏற்பட்டு, தொடர்ந்து பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.
“தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முதல் நாடாக கரோனா தடுப்பூசி இந்தியாவில் அறிமுமாகிறது; இதை வரவேற்கிறோம்” என உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு பிராந்திய இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்துள்ளார்.
காவல்துறையில் பணியாற்றும் நாய்கள் குறித்த இதழான “National Police K-9 Journal” – யை முதல் முறையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். இந்த இதழ் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச திரைப்பட விழாவானது வரும் ஜனவரி 16 அன்று கோவாவில் நடைபெறவுள்ளது. மேலும், இவ்விழாவானது சிறந்த நடிகருக்கான கேன்ஸ் விருதை வென்ற மேட்ஸ் மிக்கெல்சன் நடித்துள்ள, தாமஸ் விண்டர்பெர்கின் 'அனதர் ரவுண்டு' திரைப்பட சிறப்பு காட்சியுடன் தொடங்கவுள்ளது.
கேரளத்தின் கொச்சி மற்றும் கர்நாடகத்தின் மங்களூரு இடையே 450 கிலோமீட்டர் நீளத்திற்கு இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (CSIR), மற்றும் தேசிய இயற்பியல் ஆய்வு மையத்தின் (NPL) 75வது ஆண்டு தினத்தை முன்னிட்டு தேசிய அளவியல் மாநாடானது டெல்லியில் நடைபெற்றது. காணொளி வாயிலாக இம்மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி தேசிய அணு கால அளவு, பாரதிய நிதேஷக் திரவியா திட்டத்தை தொடக்கி வைத்தார். மேலும் தேசிய சுற்றுச்சூழல் தர நிர்ணய ஆணையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
உயிரி எரிவாயுவின் உதவியுடன் இயங்கும் பயோ அல்ட்ரா ரயிலை பிரிட்டன் விஞ்ஞானிகள் உருவாகியுள்ளனர்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின் உற்பத்தியை 175 ஜிகா வாட்டாக உயர்த்த மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கு ஆண்டு – 2022
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின் உற்பத்தியை 175 ஜிகா வாட்டாக உயர்த்த மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கு ஆண்டு – 2030
நாட்டிலுள்ள அனைத்து ரயில் நிலையங்களும் சூரிய சக்தி மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய (பசுமை ரயில்வே) இந்திய ரயில்வே நிர்ணயித்துள்ள இலக்கு ஆண்டு - 2030.
இந்தியாவில், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் இணைத்து தயாரித்து, மகாராஸ்டிரா புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் பரிசோதனை செய்து, உற்பத்தி செய்து வரும் கோவிட்ஷீல்டு தடுப்பூசியை பொது மக்களுக்கு அவசரகாலங்களில் செலுத்த மத்திய அரசின் நிபுணர் குழு அனுமதி அளித்துள்ளது.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் இணைத்து தயாரித்து சீரம் இன்ஸ்டிடியூட்டால் (புனே) உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசியின் பெயர் – கோவிட்ஷீல்டு
இந்தியாவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைத்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் பெயர் – கோவாக்சின்
கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசியான கோவாக்சினை தயாரித்துள்ள பாரத் பயொடெக் நிறுவனம் குறித்த தகவல்கள்:
ரோட்டா வைரஸ்க்கு எதிரான நாட்டின் முதல் Made in India தடுப்பூசியான Rotovac – யை உருவாக்கியுள்ளது.
ஜிகா வைரஸ், சிக்கன்குனியா தடுப்பூசிகளுக்கு முதல் முதலாக சர்வதேச காப்புரிமையைப் பெற்றுள்ளது.
இந்நிறுவனத்தின் தலைமையகம் : ஹைதராபாத், தெலுங்கானா.
பாரத் பயோடெக்கின் நிறுவனர் / தலைமை செயல் அதிகாரி – கிருஷ்ணா எல்லா.
புதிய நாடாளுமன்றம் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஒரு பார்வை :
1921 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனை எட்வின் லுட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் எனும் பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர்கள் வடிவமைத்தனர்.
83 லட்ச ரூபாயில் கட்டப்பட்ட தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் 1927 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. இதனை, அப்போதைய கவர்னர் ஜெனரல் இர்வின் பிரபு திறந்து வைத்தார்.
தற்போது, 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் 971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முக்கோண வடிவில் புதிய நாடாளுமன்றமானது கட்டப்படவுள்ளது.
இதனை "சென்ட்ரல் விஸ்டா" திட்டத்தின் கீழ் கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 10, 2020 அன்று அடிக்கல் நாட்டினார்.
2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் அதாவது, 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கட்டிடத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்ய வசதியாக மக்களவைக்கு 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமர்வதற்கு வசதியாக இருக்கைகள் அமைக்கப்படவுள்ளது.
புதிய கட்டிடத்தில், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் 1,224 உறுப்பினர்கள் பங்கேற்க முடியும்.
பொம்மைகளின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக 'TOYCATHAN - 2021’ என்னும் புதுமையான பொம்மைகளுக்கான போட்டியை மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ மற்றும் மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திருமதி ஸ்மிரிதி ஜுபின் இரானி ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.
தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக இந்தியா, வங்கதேசம், பூட்டான், நேபாளம் மற்றும் இலங்கை ஆகியவை இணைந்த திடீர் மழை வெள்ள வழிகாட்டும் சேவைகள் குழுவை மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தொடங்கியது.
FSSAI அமைப்பு புதிய கொள்கையை அறிவித்துள்ளது. அதன்படி எண்ணெய் மற்றும் கொழுப்பில் உள்ள டிரான்ஸ் கொழுப்பு அமிலமானது 2021 ம் ஆண்டில் 3% மாகவும், 2022 ஜனவரிக்குள் இதனை 2% மாக குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.
தொழில்துறை ரீதியாக உற்பத்தி செய்யப்படும் டிரான்ஸ் கொழுப்புகளை உலகில் இருந்து முற்றிலுமாக அகற்றுவதற்காக WHO நிர்ணயித்துள்ள இலக்கு ஆண்டு - 2023
நாட்டுப் பசுக்கள் குறித்து இளம் மாணவர்களிடையேயும், மக்களிடையேயும் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் ‘பசு அறிவியல்' என்ற பெயரில் ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தத் தேசிய காமதேனு ஆயோக் திட்டமிட்டுள்ளது.
'காமதேனு கெள விக்யான் பிரச்சார் பிரசார்' என்ற பெயரில் தேசிய அளவில் நடைபெறும் இத்தேர்வினை எழுத எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
கூடுதல் தகவல்களுக்கு: http://kamdhenu.gov.in/
தேசிய காமதேனு ஆயோக் தொடங்கப்பட்ட ஆண்டு : 2019
தேசிய காமதேனு ஆயோக்கின் தலைவர் : வல்லபாய் கத்ரியா.
மத்திய மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளர்ப்பு அமைச்சகத்தின் கீழ் இந்த அமைப்பு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது..
மத்திய அரசானது லடாக் யூனியன் பிரதேசத்தில் 144 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் 8 நீர்மின் நிலையங்களை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
2020 - 2021 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது -7.7% மாக சரியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகின் இரு எதிர்முனை நகரங்களான அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து தொடங்கி வடதுருவத்தின் மேலே சென்று, அட்லாண்டிக் பாதையில் பயணித்து, உலகின் மற்றொரு முனையான கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருக்கு இடைநிறுத்தம் இல்லாத விமானத்தை இயக்கி இந்திய பெண் விமானிகள் சாதனைப் படைத்துள்ளனர். முழுவதும் பெண்களால் இயக்கப்பட்ட ஏர் இந்தியா (AI 176) விமானத்தின் கேப்டன் சோயா அகர்வால்.
ஜனவரி 09 அன்று நடைபெற்ற வெளிநாடுவாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி மேற்கோள் காட்டிய திருக்குறள்:
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை
பொருள் : எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர் செய்யும் அளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்த நாடாகும்
டெல்லியையும் ஹரியானாவையும் இணைக்கும் துவாரகா விரைவுச் சாலை பணிகளை செப்டம்பர் 2022-க்குள் முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இது ஒரு 8 வழி சாலைத் திட்டமாகும்.
நாட்டிலுள்ள எம்.பிக்களிலேயே முதலாவதாக பாஜகவை சேர்ந்த மகேஷ் சர்மா COVISHIELD தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
புனேயை சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்துள்ள COVISHIELD தடுப்பூசியை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அதார் பூனாவாலா செலுத்திக் கொண்டார்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை துப்புரவு தொழிலாளியான மணீஷ் குமார் நாட்டிலேயே முதல் நபராக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
COVID - 19 தடுப்பூசி இயக்கத்திற்கான பிரத்யேக செயலி : Co - Win
COVID - 19 தடுப்பூசி இயக்கத்திற்கான பிரத்யேக அழைப்பு எண் : 1075.
கோவிஷீல்டு தடுப்பூசியை தொடர்ந்து Novavax நிறுவனம் கண்டுபிடித்துள்ள Covovax தடுப்பூசியை பரிசோதனை செய்ய அனுமதி கோரி சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனவாலா மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஜூன் 2020 முதல் கடந்த 7 மாதங்களில் 32,994 டன் மருத்துவ கழிவுகள் உருவாகியுள்ளன. நாடுமுழுவதும் கடந்த 7 மாதங்களில் அக்டோபர் மாதத்தில் தான் அதிகப்பட்சமாக 5,500 டன் கழிவுகள் உருவாகியுள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5,367 டன் கழிவுகள் உருவாகியுள்ளன.
இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக்கழகம் A ++ தகுதியைப் பெறுகிறது. தேசிய தர மதீப்பீட்டு கவுன்சில் தொலைதூரக்கல்வி நிறுவனத்திற்கு A + + அந்தஸ்து வழங்கியது இதுவே முதல் முறை ஆகும்.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 'உங்கள் அரசியலமைப்பை அறிந்து கொள்ளுங்கள்' என்ற பிரச்சாரத்தை மத்திய அரசு விரைவில் நடத்தும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா டெஹ்ராடூனில் தெரிவித்தார்
KYC - Know Your Constitution.
பசுவின் சாணத்தை அடிப்படைப் பொருளாகக் கொண்டு மணமில்லாத, சுற்றுச்சூழலுக்கு உகந்த, நச்சுத்தன்மை இல்லாத புதிய வகை பெயிண்டை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிமுகப்படுத்தினார்.
பெயர் : Khadi Prakritik Paint (காதி இயற்கை வர்ணம்)
2020ம் ஆண்டுக்கான தேசிய எரிசக்தி சேமிப்புக்கான 13 விருதுகளை 3 பிரிவின் கீழ் இந்திய ரயில்வே வென்றுள்ளது.
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு 2வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
கொரானா காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்காக 2113 கோடி ரூபாய் (30 பில்லியன் யென்) கடனுதவியை இந்தியாவிற்கு ஜப்பான் வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் விண்வெளி கல்வி மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் சம்பந்தமான புதுமைகளை பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, 100 அடல் ஆய்வகங்களைப் பயன்படுத்த இருக்கிறது. இத்தகவலை அடல் புதுமை இயக்கம், நிதி ஆயோக், இஸ்ரோ ஆகியவை அறிவித்துள்ளன.
இதன் முதல் கட்டமாக 45 அடல் ஆய்வகங்களை இஸ்ரோ நிறுவனம் தற்போது தேர்ந்தெடுத்துள்ளது.
ஆசியாவிலேயே மிகப் பெரிய அன்னதான மண்டபம் சபரிமலையில் திறக்கப்பட்டது.
2022-ம் ஆண்டுக்கான நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) 10.1% -மாக இருக்கும் என உள்நாட்டு மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா (ICRA) கணித்துள்ளது.
5 வயது சிறுமியான Presha Khemani 4 நிமிடங்கள் 17 வினாடிகளில் 150 நாடுகளின் கொடிகளை அடையாளம் கண்டதுடன் அவற்றின் தலைநகரங்களையும் குறிப்பிட்டு உலக சாதனைப் படைத்துள்ளார்.
திறன் இந்தியா திட்டத்தின் (PMKVY 3.0 - Pradhan Mantri Kaushal Vikas Yojana) மூன்றாவது கட்டமானது 600 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
Start-up எனப்படும் புது நிறுவனங்களுக்கான 'Prarambh: Startup India International Summit' - யை மத்திய ரயில்வே, வர்த்தகம், தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியுஷ் கோயல் தொடங்கி வைத்தார்.
குறுகிய வனப் பகுதியில் சென்று காயமடைந்தவர்களை மீட்பதற்காக இருசக்கர அவசர சிகிச்சை ஊர்தியான ‘Rakshita’ வை CRPF-க்கு DRDO வழங்கியுள்ளது.
CRPF - Central Reserve Police Force
DRDO - Defence Research and Development Organisation
உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் 148-வது அமர்வுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலிக் காட்சி மூலம் தலைமை தாங்கினார்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வளாகத்தை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், "பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் தந்தை"யான சுஷ்ருதாவுக்கு அர்ப்பணித்தார்.
‘ஸ்டார்ட் அப் இந்தியா சீடு ஃபண்ட்’ என்ற திட்டத்தின் மூலமாக தொழில் முனைவோர்கள் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் 1000 கோடி நிதித் தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Startup India திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டம் செயல்ப்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ‘Prarambh: Startup India International Summit’ 2021 காணொளி வாயிலாக நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, புதிய தொழில் நிறுவனங்கள் அதிகம் காணப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 1989 முதல் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பாண்டில், சாலைப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நாட்டில் சாலை விபத்துக்களை குறைக்கவும் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம், முதல் முறையாக இன்று (ஜனவரி 18) தொடங்கி வைக்கப்பட்டது. சாலைப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நாட்டில் சாலை விபத்துக்களை குறைக்கவும் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம், முதல் முறையாக ஜனவரி 18 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
32 வது ஆண்டாக தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் ஜனவரி 18/2021 முதல் பிப்ரவரி 17/2021 வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
அமிர்தசரஸிலிருந்து கன்னியாகுமரி வரை பாதுகாப்பான வேகம் குறித்த தேசிய சாம்பியன்ஷிப் பயணம் தொடங்கி வைக்கப்பட்டது.
4E’s of Road safety : Engineering, Education, Enforcement and Emergency care Services.
சாலை போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை, MSME அமைச்சர் - நிதின் கட்காரி
சாலை போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சர் - வி.கே.சிங்
பசுமையான மற்றும் தூய்மையான எரிசக்தி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கும் நோக்கில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெட்ரோலிய சிக்கன ஆராய்ச்சி சங்கம் (PCRA), 'SAKSHAM' என்னும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
SAKSHAM - Sanrakshan Kshamta Mahotsav.
PCRA - Petroleum Conservation Research Association
"SAKSHAM 2021" என்ற பெயரில் எண்ணெய் மற்றும் எரிவாயு சேமிப்பு மாதம் ஜனவரி 16 முதல் பிப்ரவரி 15 வரைக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன் தொடக்க விழாவின்போது கடந்த 2020 ம் ஆண்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு சேமிப்பிற்காக பொதுத் துறை நிறுவனங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக தேசிய அளவில் தனிச்சிறப்பு மிக்க செயல்பாட்டிற்கான விருது தமிழகத்திற்கு வழங்கப்பட்டது.
கொச்சி விமான நிலையமானது தனது கூடுதல் பயன்பாட்டிற்காக செயற்கை குளங்களை உருவாக்கி அதில் மிதக்கும் சூரிய மின்சக்தி தகடுகளை அமைத்து மின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
உலகளவில் முற்றிலும் சூரிய மின் சக்தி மூலம் இயங்கத் தொடங்கிய முதல் விமான நிலையம் : கொச்சி விமான நிலையம்
கடந்த 2015-ம் ஆண்டு முதல் இந்த விமான நிலையத்தின் மின் தேவைகள் முழுவதும் சூரிய மின் சக்தி மூலம் பூர்த்தி செய்து கொள்கிறது.
அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட ஒற்றுமை சிலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகம் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "படேல் விஷன்" எனும் திட்டத்தின் கீழ் சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் வகையில், சிலை அமைக்கப்பட்டுள்ள குஜராத் கெவாடியாவிற்கு 8 புதிய ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்தார்.
நாட்டின் முதல் பசுமை கட்டிடத்திற்கான சான்றிதழைப் பெற உள்ள ரயில் நிலையம் - கெவாடியா ரயில் நிலையம், குஜராத்.
ஒற்றுமை சிலை : சர்தார் வல்லபாய் படேல் சிலை
சிலையின் உயரம் : 597 அடி
அமைந்துள்ள இடம் : கெவாடியா, குஜராத்
திறக்கப்பட்ட ஆண்டு : 2018
அமைதி சிலை : ஜெயினாச்சார்யா ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜ்
அமைந்துள்ள இடம் : ராஜஸ்தான்
திறக்கப்பட்ட ஆண்டு : 2019
இந்தியாவில் வரும் 2025-ம் ஆண்டிற்குள் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் 50% குறைக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
2021 முதல் 2026 வரையிலான இந்தியாவின் புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இந்திய மற்றும் பிரான்ஸ் விமானப்படைகள் இணைந்து Desert Knight 21 (பாலைவன வீரன்) என்ற பெயரில் விமான போர் பயிற்சியை நடத்தியுள்ளன.
பொருளாதார ஆய்வறிக்கை 2021யை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பின்னர், தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியம் ஆய்வறிக்கையை வெளியிட்டார்.
2020-21ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரமானது -7.7% மாக சரியும்
2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.5% ஆக இருக்கும்
2021ஆம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியம், இந்தியா 11.5 சதவீத வளர்ச்சி விகிதத்தை பெரும் என்று கணித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் இந்த ஆண்டு இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்யும் உலகின் ஒரே பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழும் எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவைத் தொடர்ந்து சீனா 8.1 சதவீத வளர்ச்சியைச் சந்திக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டு இந்திய பொருளாதாரத்தில் 8 சதவீதம் வீழ்ச்சி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில், இந்தியா 6.8 சதவீத வளர்ச்சியையும், சீனா 5.6 சதவீத வளர்ச்சியையும் சந்திக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
The Davos Agenda 2021 என்ற பெயரில் World Economic Forum ஆனது தனது 51வது பதிப்பை ஜனவரி 25 முதல் ஜனவரி 29 வரை நடத்தியது.
Theme : A Crucial Year to Rebuild Trust
15வது India Digital Summit 2021 மாநாட்டினை IAMAI பொறுப்பேற்று நடத்தியது. இந்த மாநாட்டினை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார்.
Theme : ‘Aatmanirbhar Bharat – Start of New Decade’.
IAMAI : Internet and Mobile Association of India.
Google Cloud Partner Specialization எனும் அந்தஸ்தினை Infosys நிறுவனம் பெற்றுள்ளது.
நாட்டின் மூன்றாவது பெரிய தனியார் துறை வங்கியான Axis Bank ஆனது Poshvine உடன் இணைந்து புதிய Aura Credit Card-யை அறிமுகப்படுத்தியுள்ளது, இது சுகாதார மற்றும் ஆரோக்கிய நலன்களை வழங்குகிறது.
ICICI Bank வாடிக்கையாளர்களுக்கு அந்நிய செலாவணி ப்ரீபெய்ட் கார்டை விரைவாகப் பெற உதவும் வகையில் ‘InstaFX’ மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவின் முதல் கூட்டமானது டெல்லியில் நடைபெற்றது.
2021ம் ஆண்டை இந்திய - பிரெஞ்ச் சுற்றுச்சூழல் ஆண்டாக மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜி சோதனையை ஹைதராபாத்தில் வெற்றிகரமாக பரிசோதித்தது.
இதன் மூலம் 5ஜி நெட்வொர்க் சேவையை வணிக ரீதியாக சோதனை செய்த நாட்டின் முதல் நிறுவனமாக ஏர்டெல் திகழ்கிறது.
சீக்கிய மதத்தின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங்கின் 354-ஆவது பிறந்த தினம் (ஜன 20) கொண்டாடப்பட்டது.
ஆசியாவின் பழமையான பங்குச் சந்தையான மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் (BSE) முதல் முறையாக 21/01/2021 அன்று 50,000 புள்ளிகளைக் கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
புலம் பெயரும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ‘Shramshakti’ என்ற இணையளத்தை மத்திய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா தொடங்கி வைத்தார்.
2021ம் ஆண்டிற்கான இந்தியா - ஆப்பிரிக்கா வர்த்தக கவுன்சிலானது சென்னையில் நடைபெற்றது.
MASCRADE 2021 – ன் 7வது பதிப்பை மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் தொடங்கி வைத்தார். FICCI இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தது.
MASCRADE என்பது கடத்தல் மற்றும் கள்ள வர்த்தகத்திற்கு எதிரான இயக்கம்.
கடந்த 2019 ஆண்டு முதல் முறையாக கடல் கண்காணிப்பு (Sea Vigil) என்ற பெயரில் இந்திய கடற்படை மிகப்பெரிய பாதுகாப்புப் பயிற்சியில் ஈடுபட்டது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பயிற்சியானது மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான கடலோரப் பாதுகாப்புக்காக, கடல் கண்காணிப்புப் பயிற்சி ஜனவரி 12, 13 தேதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவை குழுவில் (CCS-Cabinet Committee on Security) இந்திய ராணுவத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடியில் 83 தேஜஸ் போர் விமானங்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
எல்லையில் நிலவும் கடும் குளிரை எதிர்கொள்ள உதவும் சாதனங்கள் வாங்க ராணுவத்துக்கு ரூ.420 கோடி அனுமதி.
புகாரி சாதனம் - கார்பன் மோனாக்சைடு விஷ வாயுவால் மூச்சுத் திணறலில் இருந்து இந்திய வீரர்களை காக்க வல்லது.
ஹிம் தபக் - உறைபனி குளிரில் இருந்து ராணுவ வீரர்களை பாதுகாக்க உதவும் புதிய வெப்ப சாதனம்.
அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் இந்திய இராணுவம், இந்திய கடற்படை, இந்திய விமானப்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து Kavach என்ற பெரிய அளவிலான கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொள்கின்றன.
இந்திய கடற்படை, இராணுவம் மற்றும் விமானப்படையுடன் AMPHEX - 21 பயிற்சியை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடத்துகிறது
கடல்சார் ஆராய்ச்சிக்காக தேசிய கடல் தொழில்நுட்பக் கழகத்தின் “சாகர் அன்வேசிகா” என்ற ஆராய்ச்சிக் கப்பலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை துல்லியமாக இடைமறித்து அழிக்கும் புதியரக ஆகாஷ் ஏவுகணையானது ஓடிசாவின் சண்டிப்பூர் கடற்கரைப் பகுதியில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது .
சீன தாக்குதலில் பலியான 20 இந்திய வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவகத்தில் சேர்ப்பு.
டெல்லியில் இந்தியா கேட் அருகில் போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. போர் நினைவு சின்னம் அமைப்பது குறித்து நடத்தப்பட்ட சர்வதேச அளவிலான போட்டியில் சென்னையை சேர்ந்த கட்டிட கலைஞரான யோகேஷ் சந்திரஹாசன் (WeBe Design Lab) கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு, எல்லைப் பகுதிகளில் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரால் ஜனவரி 21 முதல் ஜனவரி 27 வரை "Operation Sard Hawa" என்ற நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது.
எல்லைப் பாதுகாப்புப் படை ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் "Operation Garam Hawa" மற்றும் குளிர்காலத்தில் "Operation Sard Hawa" ஆகியவற்றை வழக்கமான பயிற்சியாக நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
BSF தலைவர் (DG) : ராகேஷ் அஸ்தானா
குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் Bharat Parv என்ற பிரம்மாண்ட தேசிய கண்காட்சி தில்லி செங்கோட்டை வளாகத்தில் ஆண்டு தோறும் ஜனவரி 26ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதனை 17வது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தொடங்கி வைத்தார்.
Theme : Aatmanirbhar Bharat and Ek Bharat Shrestha Bharat.
2021ல் நடைபெற்ற 72வது குடியரசுத் தின விழாவில் முதல் முறையாக வங்கதேசத்தின் 122 இராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
வங்கதேசம் உருவாகி 50 ஆண்டுகள் (1971) நிறைவடைந்ததை முன்னிட்டு, அந்நாட்டு ராணுவ வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர்
வங்கதேச ராணுவ கமாண்டர் - அபு முகமது ஷாஹ்னூர் ஷாவோன்
வங்கதேசத்திற்கான இந்திய தூதர் - விக்ரம் துரைசாமி
வங்கதேசத்தின் தந்தையான ஷேக் முஜிபுர் ரகுமானின் 100ம் ஆண்டு பிறந்த நாள் நடக்கும் போது, எங்களது நட்பு நாடு இந்தியாவின் குடியரசு தினத்தில் பங்கேற்பது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என வங்கதேச ராணுவ குழுவுக்கு தலைமை ஏற்கும் ராணுவ அதிகாரி கர்னல் மொஹட்ஸிம் ஹைதர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக இரு நாடுகள் இந்தியாவின் குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் கலந்துகொண்டுள்ளன.
கடந்த 2016ஆம் ஆண்டு பிரான்ஸ், 2017ஆம் ஆண்டு ஐக்கிய அமீரகம்
குடியரசு தின விழா வரலாற்றில் விமானப் படையின் போர் விமானத்தை இயக்கிய முதல் பெண் விமானி என்ற சாதனையை பாவனா காந்த் படைத்துள்ளார்.
குடியரசு தின அணிவகுப்பில் ‘Flypast’ எனப்படும் அதிவேக விமானங்களுக்கு தலைமை தாங்கும் முதல்பெண் விமானி என்ற பெருமையை விமான லெப்டினன்ட் சுவாதி ரத்தோர் பெற்றுள்ளார்.
தில்லியில் நடைப்பெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பு குறித்த தகவல்கள் பின்வருமாறு:
குடியரசு தின விழா அணிவகுப்பில் 32 அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன.
இதில் 17 அலங்கார ஊர்திகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவை.
9 அலங்கார ஊர்திகள் பல துறை அமைச்சகங்கள் மற்றும் துணை ராணுவப் படையைச் சேர்ந்தவை.
5 ஊர்திகள் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்தவை.
தமிழக அரசின் சார்பில், பல்லவர்களின் பெருமையை பறைசாற்றும், மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் மாதிரி அடங்கிய அலங்கார ஊர்தி அணிவகுப்பில் பங்கேற்றது.
அயோத்தி கலாச்சாரத்தை வெளிப்படுத்திய, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அலங்கார ஊர்தி, சிறந்த அலங்கார ஊர்தியாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசை வென்றது.
இரண்டாவது இடத்தை திரிபுரா அலங்கார ஊர்தி பிடித்தது. இது தற்சார்பு இந்தியா இலக்கை அடைய சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மூங்கில் மற்றும் பிரம்பு தயாரிப்பு பொருட்கள் மற்றும் திரிபுரா கலாச்சாரத்தை வெளிப்படுத்தின.
அமித் ஷா மத்திய ஆயுத போலீஸ் படைகளுக்கான ஆயுஷ்மான் பாரத் (Ayushman CAPF) சுகாதார திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மத்திய ரிசர்வ் காவல் படை (Central Reserve Police Force (CRPF))
எல்லை பாதுகாப்பு படை (Border Security Force (BSF))
மத்திய தொழிலக பாதுகாப்பு படை (Central Industrial Security Force (CISF))
இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (ITBB)
சந்திர சீபாபால் (SSB)
அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை (Assam Rifles Force)
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்த தினமானது நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. நேதாஜியின் பிறந்தநாளை "பராக்கிரம திவாஸ்" அதாவது "தேசிய வலிமை தினமாக" அண்மையில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி கொல்கத்தாவில் நடைபெற்ற முதலாவது பராக்கிரம தினத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
நேதாஜியின் 125வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இந்திய ரயில்வேயின் மிகப் பழமையான ரயில்களில் ஒன்றான ஹவுரா-கல்கா மெயிலுக்கு ‘நேதாஜி எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள ராஸ் தீவிற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு என மத்திய அரசு பெயர் சூட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உருவாகும் கரோனா தடுப்பூசி மருந்துகளை “தடுப்பூசி மைத்ரி” திட்டத்தின் கீழ் அண்டை நாடுகளுக்கு அனுப்பி வருகிறது. உலகில் தயாரிக்கப்படும் அனைத்து தடுப்பூசிகளிலும் இந்தியா 60 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது.
2014 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ‘Neighbourhood First' கொள்கையின்படி, பூட்டான் மற்றும் மாலத்தீவுகள் முறையே 150,000 மற்றும் 100,000 தடுப்பூசிகளைப் பெற்ற முதல் இரண்டு நாடுகளாகும்.
தேசிய வாக்காளர்கள் தினத்தையொட்டி, இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் ஆணையத்தின் இணையதள ரேடியோ "Hello Voters". இதனை தொடங்கி வைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையமானது, E-EPIC என்ற மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தேசிய வாக்காளர் தினத்தினை (ஜன 25) முன்னிட்டு இ-கியாஸ்க் (E-kiosk) தானியங்கி இயந்திர மூலம் வாக்காளர் அடையாள அட்டை பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரின் வயது 103. இவர் சமீபத்தில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் - ஷியாம் சரண் நேகி
சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையர் - சுகுமார் சென்
சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு : அக்டோபர் 25, 1951 முதல் பிப்ரவரி 21, 1952 வரை (68 கட்டங்களாக நடத்தப்பட்ட மிக நீண்ட தேர்தல்)
முதல் பொதுத் தேர்தலில் போது நிர்ணயிக்கப்பட்ட வாக்களிக்கும் வயது - 21
பின்னர் 61 வது சட்டதிருத்தம், 1989ன்படி, விதி 326 திருத்தப்பட்டு வாக்களிக்கும் வயது 21-ல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது.
காலநிலை தகவமைப்பு உச்சி மாநாட்டினை (Climate Adaptation Summit 2021) நெதர்லாந்து அரசானது ஜனவரி 25 & ஜனவரி 26 ஆகிய இரு நாட்கள் நடத்தியது.
நெதர்லாந்து பிரதமர் : Mark Rutte
இம்மாநாட்டில் மோடி ஆற்றிய உரை:
வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை 450 ஜிகாவாட் ஆக உயர்த்தவுள்ளதாகவும்,
38 மில்லியன் டன் என்ற கட்டுப்பாட்டுக்குள் கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வை கொண்டு வந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி (Green Tax) விதிப்பதற்கான திட்டமுன்வடிவுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
பசுமை வரி குறித்த தகவல்கள் :
சொந்த வாகனங்களுக்கு, 15 ஆண்டுகளுக்குப் பின் பதிவுச்சான்று புதுப்பிக்கும்போது, பசுமை வரி செலுத்த நேரிடும்.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், 15 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களின் பதிவுச்சான்று, மீண்டும் புதுப்பிக்கப்படாது.
ஆயுஷ் அமைச்சகத்தின் ஆதரவுடன், புதுதில்லியின் அகில இந்திய ஆயுர்வேதக் கழகம், ஆயுர்வேதம், COVID-19 பெருந்தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தும் மிகப்பெரும் பிரச்சாரம், “AYU SAMVAD” (My Health My Responsibility) ஆகும்.

0 Comments