சர்வதேச நிகழ்வுகள்
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிற்கான புதிய British high commissioner ஆக Alexander Ellis நியமிக்கப்பட்டுள்ளனர்.
போர்ச்சுக்கல் நாட்டிற்கான புதிய இந்திய தூதராக "மணீஷ் சவுகான்" நியமிக்கப்பட்டுள்ளார்.
போர்ச்சுக்கல் அதிபராக மார்சிலோ ரெபெலோ டிசோசா இரண்டாவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குவைத் நாட்டின் பிரதமர் ஷேக் சபா அல் கலீத் அல் சபா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்
கிர்கிஸ்தான் நாட்டின் புதிய அதிபராக சதிர் ஜபரோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மத்திய ஆப்பிரிக்க குடியரசுத் தலைவராக Faustin-Archange Touadera மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் அதிபராக நீண்ட காலம் பதவி வகித்து வரும் யோவேரி முசவேனி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Estonia நாட்டின் முதல் பெண் பிரதமராக Kaja Kallas தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
COVID-19 தொற்றுநோயை அரசாங்கம் கையாண்ட விதத்தில் எதிர்ப்புக்கள் மற்றும் பொதுமக்கள் சீற்றத்தைத் தொடர்ந்து மங்கோலியாவின் பிரதமர் Khurelsukh Ukhnaa தனது முழு அரசாங்கத்துடனும் ராஜினாமா செய்துள்ளார்.
இத்தாலி பிரதமர் Giuseppe Conte தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்
அமெரிக்காவின் பைசர் பயோஎன்டெக் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியை பொது மக்களுக்கு அவசரகாலங்களில் செலுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
பூர்வக்குடி மக்களின் வரலாற்றைப் போற்றும் வகையில் ஆஸ்திரேலியாவானது தனது நாட்டின் தேசிய கீதத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர் – ஸ்காட் மாரிசன்
தேசிய கீதம் – Advanced Australia Fair | புதிய வார்த்தை – We are Young and Free
யுரேனியம் செறிவூட்டும் அளவை 20 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
இடம் : போர்டோ செறிவூட்டும் மையம்
அதிபர் : ஹசன் ரௌஹானி
அணுசக்தி அமைப்பின் தலைவர் : அலி அக்பர் சலேஹி
ஈரானுக்கும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கிடையே அணுசக்தி ஒப்பந்தமானது கடந்த 2015 ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை ஈரான் உறுதி செய்ய ஒப்புக்கொண்டது.
மேலும் அணுசக்தி திட்டங்களுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருளை 3.67 சதவீதத்திற்கு மேல் செறிவூட்டக்கூடாது என்ற நிபந்தனையும் ஈரானுக்கு விதிக்கப்பட்டது.
அதிபராக ட்ரம்ப் பதவியேற்றப் பிறகு இவ்வொப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018 – ல் அறிவித்ததுடன், ஈரான் மீதான பொருளாதார தடைகளை மீண்டும் அமல்படுத்தினார்
பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவிகள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் மலாலா யூசுப்சாய் கல்வி உதவித்தொகை மசோதாவிற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
மலாலா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற ஆண்டு – அக்டோபர் 10, 2014.
சர்வதேச மலாலா தினம் – ஜூலை 12.
உலகின் மூன்றாவது பெரிய அரிசி ஏற்றுமதியாளரான வியட்நாம், உள்நாட்டு அரிசி விலையேற்றம் மற்றும் ஒன்பது ஆண்டுகளில் மிக உயர்ந்த உள்நாட்டு விநியோகம் காரணமாக, முதல் முறையாக இந்தியாவிடமிருந்து அரிசியை வாங்கத் தொடங்கியுள்ளது.
டிரம்ப் அரசானது பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளையும் "Major Security Partners" என அறிவித்தது.
முன்னதாக, டிரம்ப் அரசானது கியூபாவை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவித்து கருப்பு பட்டியலில் இணைத்தது குறிப்பிடத்தக்கது
டிரம்ப் அரசானது கியூபாவை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவித்து கருப்பு பட்டியலில் இணைத்தது.
மேலும், சீனாவின் செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி, விமான தயாரிப்பு நிறுவனமான கோமேக் உள்பட 9 நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்த்து தடை விதித்துள்ளது. இதன்மூலம் இந்த 9 நிறுவனங்களிலும் அமெரிக்கர்கள் முதலீடு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி என நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப்பின் சுட்டுரை கணக்கை நிரந்தரமாக முடக்குவதாக Twitter நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக ட்ரம்ப்பின் Facebook மற்றும் Instagram கணக்குகள் காலவரையறை இன்றி நிறுத்தி வைக்கப்படுவதாக பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் கலவரத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து டிரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை நான்சி பெலோசி தாக்கல் செய்தார்.
அமெரிக்க வரலாற்றில் இரண்டு முறை பதவி நீக்க குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரே அதிபர் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றார். தொடர்ந்து முதல் பெண் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவி ஏற்றார்.
அமெரிக்க ராணுவத்தின் முதல் தலைமை தகவல் அலுவலராக திருச்சி என்ஐடி பட்டதாரியான ராஜ் ஐயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் அட்டர்னி ஜெனரல் பதவிக்கு நீதிபதி மெரிக் கார்லண்ட் மற்றும் இணை அட்டர்னி ஜெனரலாக இந்திய - அமெரிக்கரான வனிதா குப்தா ஆகியோரை நியமித்துள்ளார்.
அமெரிக்க துணை அதிபராகத் தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸின் துணை செய்தித் தொடர்பாளர் பொறுப்பிற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சபரீனா சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவியேற்பு உரையை தயாரித்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞரான வினய் ரெட்டி என்பவராவர். இவர் தெலுங்கானாவை பூர்வீகமாகக் கொண்டவர்
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள ஜோ பைடனின் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளியினர் குறித்த தகவல்கள் பின்வருமாறு:
கமலா ஹாரிஸ் – துணை அதிபர்
சப்ரினா சிங் – துணை அதிபரின் அலுவலக ஊடகப்பிரிவு உதவி செயலாளர்
மாலா அடிகா – ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனின் கொள்கை இயக்குனர்
கரிமா வர்மா - ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனின் டிஜிட்டல் பிரிவு இயக்குனர்
வினய் ரெட்டி – அதிபரின் உரையை எழுதி தரும் குழுவின் இயக்குனர்.
வனிதா குப்தா – முதன்மை சட்ட அதிகாரி (அட்டர்னி ஜெனரல்)
நீரா டாண்டன் – மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குனர்
வேதாந்த் பட்டேல் – வெள்ளை மாளிகையின் உதவி பத்திரிக்கை செயலாளர்
விவேக் மூர்த்தி – தலைமை அறுவை சிகிச்சை வல்லுநர்.
அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர் பணியாற்ற டிரம்ப் அரசு விதித்த தடையை தற்போதைய அதிபர் ஜோ பைடன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
கரோனா தடுப்பு மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பாக தெற்காசிய நாடுகளிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான முதல் மாநாடானது சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றது . இதில் பங்கேற்று ஆலோசனை நடத்திய நாடுகள் : பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், வங்கதேசம்
இந்தோனேசியாவின் ஸ்ரீ விஜயா ஏர் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 732 விமானம் 62 பயணிகளுடன் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியது.
மனித செயல்பாடுகளால் நடப்பாண்டில் வளிமண்டலத்திலுள்ள கார்பனின் அளவானது தொழில் புரட்சிக்கு முந்தைய அளவைக் காட்டிலும் 50% அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சிறந்த 'Carbon Capture Technology' யை அறிமுகம் செய்பவருக்கு 100 மில்லியன் டாலர்கள் நன்கொடை அளிப்பதாக உலகின் மிக பெரும் பணக்காரர்களில் ஒருவரான Elon Musk கூறியுள்ளார்.
கார்கள் மற்றும் கார்பன் வெளியேற்றம் இல்லாத பசுமை நகரம் ஒன்றை செங்கடலை ஒட்டியுள்ள பாலைவனப் பகுதியில், 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் "நியோம்" என்ற பெயரில் சவுதி அரேபியா உருவாக்குகிறது.
உலகின் மிக ஆழமான மற்றும் பழமையான ஏரியான பைக்கால் ஏரியில் மிக நீண்ட பனிக்கட்டிக்கு கீழ் நீந்தியதற்காக மாஸ்கோ நீச்சல் வீரர் யெகாடெரினா நெக்ராசோவா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
உலகின் தொன்மையான, 45,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியமானது (பன்றி ஓவியம் - 136 * 54 செ.மீ) இந்தோனேஷியாவில் உள்ள சுலோவெசி தீவில் கண்டுபிடிக்கப்பட்டது.
தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஜப்பானும் ஜனவரி 15/2021 அன்று கையெழுத்திட்டன. கையெழுத்திட்டவர்கள் விபரம் :
Ravi Shankar Prasad - மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர்
Takeda Ryota - ஜப்பானிய உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர்
நான்காவது One Planet Summit ஆனது ஜனவரி 11, 2021 அன்று நடைபெற்றது. இது இயற்கையின் பாதுகாப்பை முன்னேற்றுவதை உச்சிமாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
Theme : Let’s act together for nature
நடைபெற்ற இடம் : பாரீஸ்
மாநாட்டை நடத்தியவர்கள் : United Nations, World Bank and France.
முதல் மாநாடு நடைபெற்ற ஆண்டு : 2017
பாரிஸில் நடைபெற்ற 'பல்லுயிர் பெருக்கத்திற்கான ஒரு கிரக உச்சி மாநாட்டை' தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அடுத்த பத்து ஆண்டுகளில் Great Green Wall திட்டத்திற்கு 14 பில்லியன் டாலர் கூடுதல் நிதியுதவிக்கு உறுதியளிக்கப்பட்டதாக அறிவித்தார்.
Open Skies Treaty ஒப்பந்த்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறுவதாக கடந்த ஜனவரி 15 அன்று அறிவித்தது. முன்னதாக, கடந்த நவம்பர் 2020ல் அமெரிக்கா இவ்வொப்பந்தத்திலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய யூனியனிலிருந்து (BREXIT) பிரிட்டன் கடந்த ஜனவரி 31,2020 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இருப்பினும், பிரிட்டன் முழுமையாக வெளியேற 11 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்த அவகாசம் தற்போது நிறைவடைந்ததைத் தொடர்ந்து புத்தாண்டு முதல் பிரிட்டன் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது
ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரிட்டன் அதிபர் போரிஸ் ஜான்சன் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
2021 ம் ஆண்டிற்கான ஜி7 மாநாடானது வரும் ஜூன் 11 முதல் ஜூன் 13 வரை பிரிட்டன் கடற்கரை நகரான கார்ன்வால்லில் நடைபெறவுள்ளது.
ஜி7 உறுப்பு நாடுகள் : அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா இடம் பெறுவதற்கு ஆதரவளித்த முதல் நிரந்தர உறுப்பு நாடு பிரிட்டன்.
BRICS அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ள ஆண்டு - 2021
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ள ஆண்டு - 2021 ஆகஸ்ட் மாதத்திற்கு
ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ள ஆண்டு – 2023
சீனாவை சேர்ந்த ஹுவாங் யான்லிங் என்ற பெண் உலகின் முதல் கரோனா நோயாளியாக கருதப்படுகிறார். அவர் மர்மான முறையில் மாயமாகியுள்ளார் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
சீனாவின் சைனோஃபார்ம் நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசியை பொது மக்களுக்குச் செலுத்துவதற்கு பாகிஸ்தான் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
F-15 EX ரக போர் விமானத்தை இந்தியாவிற்கு விற்க அமெரிக்க அனுமதி அளித்துள்ளது.
ஸ்வீடன் நாட்டின் Gripen, பிரான்சின் Rafale போர் விமானங்களை போல் இந்த நவீன போர் விமானத்தை போயிங் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
பாகிஸ்தான் சிந்து மாகாணம் ஐதராபாத்தில் உள்ள 126 ஆண்டுகள் பழமையான கோஸ்வாமி பர்சுத்தம் கர் நிகால் கர் என்ற சிவன் கோவில், வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.

0 Comments